உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி, இலங்கையில் வாழும் மக்கள் சராசரியாக இரவில் 8.1 மணிநேரம் உறங்குவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளில் வாழும் மக்களின் சராசரி தூக்கத்தின் அளவை அடிப்படையாக... Read more »

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இராணுவத்தினரே கூலிப்படையாகச் செயற்படுகின்றனர்!

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களே இன்று வெளிநாடுகளில் கூலிப்படையாக செயற்படுவதாக சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதாக வெளியாகும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானி... Read more »

மக்கள் வங்கி அவசர எச்சரிக்கை

மக்கள் வங்கியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வங்கியின் முகப்புத்தக பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தலில், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற 18 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு... Read more »

சாலை கடற்பகுதியில் ஐவர் கடற்படையால் கைது.

வடமராட்சி கிழக்கு  சுண்டிக்குளத்திற்க்கும் சாலைக்கும் இடைப்பட்ட  கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் 07.05.2024 இன்று மேற்கொண்ட  திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  வேளை  இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில்... Read more »

சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம் – அதிகாரிகளும், யாழ்ப்பாண ஆதீனமும் மெளனம்

நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளும், யாழ்ப்பாண ஆதீனமும் மெளனம் காத்துள்ளது. யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன வளாகத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காணியில் அமெரிக்கன் மிசனரிகள் காலத்தில்... Read more »

திருநெல்வேலியில் பிரபல பூட்சிற்றிக்கு 150,000/= தண்டம்..!

திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பூட்சிற்றிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது திகதி காலாவதியான பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள்... Read more »

யாழ்ப்பாணத்தில் சூடு பிடித்துள்ள வெள்ளரிப்பழ விற்பனை..!

உடல் வெப்பநிலையை குறைத்து குளிர்மையினை எற்படுத்தும் வெள்ளரிப்பழம் யாழ்ப்பாணத்தில் தற்போது மும்முரமாக விற்பனையாகி வருகின்றது. திருநெல்வேலி, யாழ்ப்பாண நகர சந்தைப்பகுதிகளுக்கு அருகாமையில் வெள்ளாரிப்பழத்தினை வியாபாரிகளிடம்  பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்துவருகின்றனர். ஒரு வெள்ளாரிப் பழத்தின் விலை ரூபா 300 முதல் 450 ரூபா வரை... Read more »

காரைநகரில் தனியார் பேருந்தை மறித்து மிரட்டல் விடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு!

காரைநகரில் தனியார் பேருந்தை மறித்து மிரட்டல் விடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு! நேற்றையதினம் காரைநகர் – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றினை வலந்தலை சந்தியில் மறித்து கும்பல் ஒன்று மிரட்டல் விடுத்ததாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன்... Read more »

சுன்னாகம் பகுதியில் பரபரப்பு

யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  சுன்னாகம்  காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் , அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும் ,... Read more »

இஸ்ரேலுக்கான அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளையும் துருக்கி நிறுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கான அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளையும் துருக்கி நிறுத்தியுள்ளது. “இஸ்ரேல் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து தயாரிப்புகளையும் உள்ளடக்கியது” என்று துருக்கியின் வர்த்தக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி போதுமான அளவு வருவதற்கு இஸ்ரேலிய... Read more »