சாலை கடற்பகுதியில் ஐவர் கடற்படையால் கைது.

வடமராட்சி கிழக்கு  சுண்டிக்குளத்திற்க்கும் சாலைக்கும் இடைப்பட்ட  கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் 07.05.2024 இன்று மேற்கொண்ட  திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  வேளை  இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில் தொடர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது
இதன் ஒரு பகுதியாக இன்று சாலை கடற்பகுதியில் வைத்து குறித்த ஐவரும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கடற்படை முகாம் அழைத்துவரப்பட்டு   விசாரணைகளின் பின்னர் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews