பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களில் பொது மக்களை ஏமாற்றும் மர்ம நபர்.

பொலிஸ் அதிகாரிகள் சிலரின் பெயரில், போலி பேஸ்புக் கணக்குகள் உருவாக்கி தகவல் சேரிக்கும் நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. தவிந்து கல்ஹார என்ற நபர் தான் புலனாய்வு பிரிவு அதிகாரி என அடையாளப்படுத்தி பல்வேறு நபர்களின் தகவல்கள் மற்றும் முறைப்பாடுகள் சேகரிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.... Read more »

யாழில் வாகனமொன்றை சுற்றிவளைத்த கடற்படையினர்.

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. வாகனமொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்ததை அவதானித்த கடற்படையினர் குறித்த வாகனத்தினை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். இதன்போது... Read more »

மீனவர்களின் மோதலுக்கு அரசாங்கமே மூலகாரணம்! ந.ஸ்ரீகாந்தா.

கடற்றொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபாவேசத்தை, திரைமறைவில் நின்றபடி, மேலும் தூண்டிவிட்டு, இரு தரப்பு மீனவர்களையும் மோதவைக்கும் அரசின் நோக்கத்தை சில தமிழ் அரசியல் சக்திகள் செயலில் காட்டத் தொடங்கியுள்ளனவா என்ற கேள்வி எழுந்துள்ளது – என்று, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர்  சட்டத்தரணி   ந.ஸ்ரீகாந்தா... Read more »

யாழில் புரைக்கேறி உயிரிழந்த ஒரு வயதுக் குழந்தை! – பி.சி.ஆர். சோதனையில் கொரோனா உறுதி!!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடுப்பிட்டியைச் சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரைக்கேறிய நிலையில் நேற்று (15)... Read more »

21, 22ஆம் திகதிகளில் பாடசாலைக்கு செல்லாதிருக்க அதிபர், ஆசிரியர்கள் தீர்மானம்.

எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யாவ்வல பஞ்ஞாலோக தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் அழைக்கப்பட்டுள்ள 21, 22 ஆம் திகதிகளில் 200... Read more »

காரை நகர் கடற்பரப்பில் கடற்படை படகு மோதியதில் ஒருவரை காணவில்லை….!

கடற்படையினரின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம். கடற்படையினரின் படகு மோதியதில் இந்தியாவின் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கீரன் என்னும் மீனவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இந்திய மீனவர்களின் படகு ஒன்று காரைநகர் கோவலம் கடற்பரப்பிற்குள் உள் நுழைந்த சமயம் அதனை... Read more »

18,19 வயதுடையவர்களுக்கு வியாழக்கிழமை முதல் தடுப்பூசி…!

வடமாகாண 18, 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர்... Read more »

18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பம் – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்..!

18, 19 வயது பிரிவினருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய... Read more »

மக்களின் தேவைகள் தொடர்பில் மகஜர் கையளிக்கப்பு….Nafso

பூநகரி பிரதேச மக்களின் தேவைகள் தொடர்பில் இன்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரனிடம் இவ்வாறு மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில்,நாட்டில் ஏற்ப்பட்ட யுத்தத்தின் பின் மக்கள் தமது... Read more »

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் – மாடுகள் – பலி

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு மாடுகள் பலியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது . யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிட்சார்த்த சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதம் யாழ் நோக்கி பயணித்துள்ளது. இதன்போது கூட்டமாக பயணித்த மாடுகளை... Read more »