பளை பொலிஸ் நிலையத்தில் ஐந்து நாட்களில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பொலிஸாருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது Read more »

பொய் வாக்குறுதி வழங்கிய அமைச்சர் டக்ளஸ்.பாலத்தினை அமைக்கக்கோரி  ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு  மக்கள் நேற்றைய தினம் 17.11.2021 போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அப்பகுதி மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரின் ஏற்ப்பாட்டில் 11.00 மணியளவில் ஆர்ப்பாடம் இடம்பெற்றது. குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை ... Read more »

வல்வெட்டித்துறை பாதீடு தோற்கடிப்பு – இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளரானவர் பதவியிழக்கும் நிலை!

இரண்டு மாதங்களுக்கு முன்னர் தவிசாளராக தெரிவானவர் பாதீடு தோற்கடிக்கப்பட்டமையால் , தவிசாளர் பதவியை இழக்கும் நிலைமையில் உள்ளார்.   வல்வெட்டித்துறை நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் புதன்கிழமை சபையில் புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் பாதீடு ஒரு வாக்கினால்... Read more »

கருங்கல்லால் வீதி அமைத்து கள்ள மண் திருட்டு….

தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.  நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு,நாகர்கோவில்   வடக்கு, குடாரப்பு பகுதிகளில் கும்பல் ஒன்றினால் மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறித்த பகுதிகளில் ஒரு... Read more »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிறுவனமயப்படுத்தி, கட்டமைக்க தீர்மானம்…..!வி.மணிவண்ணன்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கட்டமைப்புக்களை நிறுவன மயப்படுத்தி வலுப்படுத்துவது தொடர்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள், மற்றும் நிர்வாக உறுப்பினர்களை சந்தித்துள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெவிவித்துள்ளாள்ளார். இது குறித்த முதல்வர் மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த பல ஆண்டுகளாக தென்னிலங்கை... Read more »

ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்த குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்த குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்... Read more »

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகருக்கும் சுரேன் ராகவனுக்கம் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் உள்ள கனடா இல்லத்தில் இடம்பெற்றது. இலங்கை – கனடா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் இம்... Read more »

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று முதல் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய, முதல் கட்டமாக மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்த... Read more »

ஞானசார தேரரின் நியமனம் குறித்து டிலான் பெரேரா கருத்து!

சிறந்த நோக்கத்திற்கான ஒரு நாடு – ஒரே சட்டம் செயலணிக்கு ஞானசார தேரர் தகுதியற்றவர் என்றும், ஞானசார தேரரும், அருட்தந்தை சிறில்காமினியும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள் என்றும், இருவரும் அடிப்படைவாதிகள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது... Read more »