பளை பொலிஸ் நிலையத்தில் ஐந்து நாட்களில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து பொலிஸாருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews