மொட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டே இளைஞன் கொலை..! சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை,

யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் அருகில் இறந்து கிடந்தவரின் தலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றால் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதாகவும் அதுவே இறப்புக்கு காரணம் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியினால் அறிக்கையிடப்பட்டிருக்கின்றது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் உள்ள கட்டிடத் தொகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி கமரா... Read more »

மேலும் 84 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 12,022 கொவிட் மரணங்கள்…!

51 ஆண்கள், 33 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 58 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 84 மரணங்கள் நேற்று (17) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் கனலி சஞ்சிகை வெளியீடு….!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் கனலி சஞ்சிகை வெளியீடு நேற்றைய தினம் (17.09.2021) நிகழ்நிலை வெளியினூடாக நிகழ்த்தப்பட்டது. மாணவர் சஞ்சிகையை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா வெளியிட்டு வைத்தார். ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் நடைபெற்ற... Read more »

பளையில் சிற்றுந்து முச்சக்கர வண்டி விபத்து, சாரதி படுகாயத்துடன் தப்பியோட்டம்….,!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில்   இன்று (18) யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய ரக பேரூந்தும்  கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி  விபத்துக் குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்நோக்கி பணியாளர்களை ஏற்றி... Read more »

ஐக்கிய நாடுகள் சபை தொடர்பில் சந்தேகம் வெளியிட்டார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

உலகலாவிய மட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு தரப்பினர் தங்களின் ஆதிக்கத்தினை செயற்படுத்தும் ஒரு கருவியாக ஐக்கிய நாடுகள் சபையை பயன்படுத்திக் கொள்ள கூடாது. ஐக்கிய நாடுகள் சபையும் அதனுடன் இணைந்த தாபனங்களும் மூலக் கொள்கைக்கு அமைய செயற்படுகிறதா என்று எண்ண தோன்றுகிறது என வெளிநாட்டலுவல்கள்... Read more »

கரைதுறைப் பற்று பிரதேச பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவர், சாரதி கைது……!

முள்ளியவளையில் விபத்தினை ஏற்படுத்தி இளைஞன் ஒருவரை படுகாயப்படுத்திய கப் வாகனத்தில் பயணம் மேற்கொண்ட கரைதுறைப்பற்று பிரதேச பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட இருவர் முள்ளியவளை பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். 17.09.21 அன்று இரவு தண்ணீரூற்று குமுழமுனை வீதியின் முனைப்பு குதியில் கரைதுறைப்பற்று பிரதேச ப.நோ.கூட்டுறவு... Read more »

யாழ்.கோப்பாய் – இராசபாதை வீதியில் இன்று காலை விபத்து! ஒருவர் உயிரிழப்பு.. |

யாழ்.கோப்பாய் – ராசபாதை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை மின்சாரசபை வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

வீதியில் நடமாடியோருக்கு கொக்குவிலில் அன்டிஜன் பரிசோதனை! –

யாழ்ப்பாணத்தில் இன்று தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் பயணிப்பவர்கள் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து இந்த நடவடிக்கையை இன்று முற்பகல் கொக்குவில் கே.கே.எஸ் வீதியில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் ஆரம்பித்தனர்.நாட்டில் தனிமைப்படுத்தல்... Read more »

மூன்று பிரதேசங்களில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகொலை; மூவருக்குக் காயம்

எல்ல, வெலிவேரிய, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார்  தெரிவித்தனர். எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவர தோட்டம் மேற்பிரிவு பிரதேசத்தில், இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்... Read more »

குடும்பத்தில் வாக்குவாதம் கொலையில் முடிந்தது!

வெலிவேரிய – நெதுன்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது பாட்டியை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 74 வயதான வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாட்டிக்கும் பேரனுக்கும் இடையில் நேற்று வீட்டில் இடம்பெற்ற வாக்குவாதத்தின்போது, சந்தேகநபர் தனது... Read more »