குடும்பத்தில் வாக்குவாதம் கொலையில் முடிந்தது!

வெலிவேரிய – நெதுன்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது பாட்டியை கொலை செய்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
74 வயதான வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாட்டிக்கும் பேரனுக்கும் இடையில் நேற்று வீட்டில் இடம்பெற்ற வாக்குவாதத்தின்போது, சந்தேகநபர் தனது பாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதால் பாட்டி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews