இலங்கை அரசு அதன் உண்மை முகத்தினை தற்பொழுது சிங்கள மக்களுக்கும் காட்டி வருகின்றது – சுகாஷ் தெரிவிப்பு…!

தனது பெயரில் ஜனநாயக சோசலிச குடியரசு என்று பெயரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கின்ற இலங்கை அரசு அதன் உண்மை முகத்தினை தற்பொழுது சிங்கள மக்களுக்கும் காட்டி வருகின்றது என்பதுதான் உண்மை என்ன தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணிமான கனகரட்ணம்... Read more »

புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நடைபவனி…!

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது தொடர்பில் விழிப்புணர்வூட்டவும், புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவும் யாழ்.மாவட்டத்தில் நடைபவனி ஒன்று நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் மார்ச் 13ம் திகதி திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டில் இருநூறாவது ஆண்டுவிழாவினைக் கொண்டாடும் யாழ்.பரியோவான் கல்லூரியுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற... Read more »

வளர்ப்பு மகளான சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கிய பெண் கைது!

சிறுமி ஒருவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் சம்பவத்துடன் தொர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம, குருகுலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமியின் மாற்றாந்தாய் எனவும்,... Read more »

மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இராணுவ பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது..!

மோட்டார் சைக்கிள் திருடிய இராணுவ பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் – சாலியபுர பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 28 வயதுடைய முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது இராணுவ படைப்பிரிவில் பொலிஸ்... Read more »

மதுபோதையில் நண்பர்களுக்கிடையில் நடந்த மோதலில் இளைஞன் கொலை, 5 பேர் கைது!

வவுனியா – பூவரசங்குளம் மணியர்குள பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். நேற்றுமுன்தினம் (09) மாலை மதுபோதையில் நண்பர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தினால் குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இளைஞர் ஒருவரின்... Read more »

குழந்தையை யாரும் எடுத்து பத்திரமாக வளர்ப்பார்கள் என நினைத்தே ரயிலில் சிசுவை கைவிட்டு சென்ற சிசுவின் தாயான திருமணமாக பெண் வாக்குமூலம்… |

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் மலசல கூடத்திற்குள் சிசு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.  இந்நிலையில் அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்தே அப்படி... Read more »

பாதசாரி கடவை ஊடாக தொலைபேசியில் பேசிக் கொண்டு சென்ற நபரின் காதை வெட்டி எறிந்த இளைஞன்!

தொலைபேசியில் பேசிக் கொண்டு வீதியின் குறுக்கே பாதசாரி கடவையில் சென்ற விசேட தேவையுடைய ஒருவரின் காதை வெட்டி துண்டாக்கிய இளைஞர் ஒருவர் அவரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் பதுளை – மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். பாதசாரி கடவையில் சென்று... Read more »

மரண வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் உணவு எடுத்துச் சென்றவர் உயிரிழப்பு!

வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது படி ரக வாகனம் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்து குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸாரின்... Read more »