மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இராணுவ பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது..!

மோட்டார் சைக்கிள் திருடிய இராணுவ பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் – சாலியபுர பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 28 வயதுடைய முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தற்போது இராணுவ படைப்பிரிவில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றி வருகிறார்.

கைதுசெய்யப்பட்ட மற்றைய நபர் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர்.கடந்த மாதம் 27ஆம் திகதி அநுராதபுரம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக

மோட்டார் சைக்கிளை திருடிய இந்த இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்.அதனை விற்பனை செய்வதற்காக மஹவ பிரதேசத்தில் வசிக்கும் நண்பரிடம்

மோட்டார் சைக்கிளை கையளித்துள்ளமை விசாரணைகளில் தெரிய ந்துள்ளது.

Recommended For You

About the Author: admin