வளர்ப்பு மகளான சிறுமியை மூர்க்கத்தனமாக தாக்கிய பெண் கைது!

சிறுமி ஒருவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் சம்பவத்துடன் தொர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம, குருகுலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமியின் மாற்றாந்தாய் எனவும், சிறுவனின் தந்தை வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான 17 வயது சிறுமிக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin