அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டவுடன் இறக்குமதி பொருட்கள் மீதான தடை நீக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். “இதுவொரு தற்காலிக தடை.... Read more »
வெறும் 25 நாட்களுக்குள் நாட்டில் காணப்பட்ட சமையல் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், “நாங்கள் மிகவும் சரியான முறையிலும் ஒரு ஒழுங்கு முறையுடனும் செயற்பட்டதன்... Read more »
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை 60ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் குறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. இடைக்கால வரவு செலவு திட்ட முன்மொழிவின்படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை... Read more »
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் நான்காவது நாளாக நேற்று (13.09.2022) ஊர்திவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – பூநகரி, வாடியடி சந்தியில் காலை ஆரம்பமான ஊர்திவழி போராட்டம் தொடர்ந்து, பரந்தன், முறிகண்டி,... Read more »
லண்டனில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. பாரம்பரியத்தில் இருந்து விலகி மகாராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று... Read more »
இலங்கை மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு மாலைதீவு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவாவில் மாலைதீவின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அசிம் அஹமட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்தி தொடர்பான சவால்களை அதன் நன்கு நிறுவப்பட்ட ஜனநாயக செயல்முறைகள் மூலம் வெற்றிகொள்வதற்கான... Read more »
ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட செயலகத்திற்கோ செல்ல வேண்டியது கட்டாயமானது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனூடாக 6 மாதங்களுக்காக வழங்கப்பட்ட... Read more »
கோவிட் நோய் தவிர, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என அரச மருத்துவ அலுவலர்கள் மன்றத்தின் செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்... Read more »
இலங்கையில் மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் 2 மாதங்களாக வெளிநாட்டில் இருந்த போதிலும், அந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக ஏறக்குறைய 15 லட்சம் ரூபாவை பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளிநாடு சென்ற ஆளுநர் எதிர்வரும் 29ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார். எனினும் குறித்த... Read more »