வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்ற மாமனிதர் தராகி சிவராம் அவர்களது நினைவேந்தல்…!

மாமனிதர் தராகி (சிவராம்) அவர்களது 19 வது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் அதன் தலைவர் கு.மகாலிங்கம் தலமையில் காலை 10:45 மணியளவில் ஆரம்பமானது.

இதில் முதல் நிகழ்வாக பொது ஈகை சுடரினை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ரஜிவர்மன் அவர்களில் தாயார் ஏற்றிவைத்ததை தொடர்ந்து மாமனிதர் தராகி அவர்களது திரு உருவ படத்திற்கு ஈகை சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியினை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் செலுத்தினார். தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ரவிவர்மன் அவர்களது உருவ படத்திற்கு

ஊடகவியலாளர் மாமனிதர்

தொடர்ந்து ரஜிவர்மன் அவர்களின் திருவுருவ படத்திற்கு ஈகை சுடரேற்றி மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அணிவித்திருந்தார்

சம நேரத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராக்கி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் யாழ் நினைவுரைகளை யாழ்ப்பாணம் பல்கலைைக்கழக கலைத்துறை பீடாதிபதி பேராசிரியர் ரகுராம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராாசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் , முன்னாாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், சிவராம் அவர்களுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தவரும் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஆலோசகருமான ஊடகவியலாளர் வே.தவச்செல்வம், தீம்புனல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சூரன் ஏ ரவிவர்மா ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைத்துறை பீடாதிபதி பேராசிரியர் ரகுராம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேம சந்திரன், மற்றும் அவரது கட்சி உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சி முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், மற்றும் இலங்கை தமிழரசு கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளீதரன், வடமாகாண மீனவர் அமைப்பின் தலைவர் அ.அன்னராசா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் செயற்பாட்டாளர் ஆ.சுரேஸ்குமார், ஜனரய சுகாதார சேவைகள் தொழிற்சங்க வடக்கு மாகாண தலைவர் முகுந்தன், மூத்த ஊடகவியலாளர்கள், யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் உறுப்பினர்கள், முல்லைத்தீவு ஊடக மையத்தின் செயலாளர் கிஷாந்த், மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதே வேளை வலம்புரி பத்திரிகைக்கு எதிராக பொலீசில் செய்யப்பட்ட முறைப்பாட்டை கண்டித்து ஊடக அறிக்கை ஒன்றும் வடமராட்சி ஊடக உள்ளத்தால் வெளியிடப்பட்டது.

ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு | பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பின்னர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews