இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீன் பிடி தடை காலத்தின் போது கிடப்பில் போடப்பட்ட இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறும் என மீனவர்கள் எதிபார்த்து இருந்த நிலையில் பேச்சுவாhத்தை நடைபெறாததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.... Read more »
இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களுக்கான நிவாரணத்தை உறுதி செய்யவேண்டும். மீளெழுச்சி திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களின்போது சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமைகள்... Read more »
இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடனும் ரஷ்யா நல்லுறவைப் பேணி வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்தார். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இளம் தொழில்முனைவோர்களுடன் அவர் வியாழக்கிழமை உரையாடினார். அந்த நிகழ்ச்சியில் இந்தியா, சீனாவுடனான ரஷ்யாவின் நல்லுறவு குறித்து பேசப்பட்டது. அப்போது விளாடிமீர்... Read more »
மேற்கத்திய இராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் பின்லாந்து இணைய விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்த நிலையில், உக்ரைனுக்கு தேவையான போர் ஆயுதங்களை வழங்க இருப்பதாக பின்லாந்து அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா இராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன்... Read more »
உக்ரைனின் முன்னணி நகரமான செவெரோடோனெட்ஸ்கில் உள்ள அசோட் இரசாயன ஆலையில் ரஷ்யா மேற்கொண்ட ஷெல் தாக்குதலை அடுத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டன் கணக்கில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் செர்ஹி ஹைடாய் தேசிய தொலைக்காட்சி ஒன்றில்... Read more »
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பிலிருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கை காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி, ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு, ரஷ்யாவை தமது அமைப்பிலிருந்து இடைநிறுத்தியது. உக்ரைன் மீதான நடவடிக்கை தங்களது மதிப்புகளுக்கு... Read more »
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி படகில் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், கடந்த 9ம் திகதி அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையிலிருந்து படகு வழியாக... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ, கடந்த மாதம் ஓய்வுபெற்ற நிலையில், அந்த அப்பதவிக்கு தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச... Read more »
பிரித்தானியாவில் இருந்து அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு வந்து புகலிடம் கோரியவர்களை அடுத்த வாரம் ருவாண்டாவுக்கு நாடு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதனை தடுப்பதற்கான தடை உத்தரவை கோரிலண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனு... Read more »
சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் சமகாலத்தில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், முழுமையான மனிதாபிமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தில் இலங்கை உள்ளதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் அதன்... Read more »