மாட்டுப் பட்டிக்கு உள்ளேயே மாட்டினை இறைச்சிக்காக வெட்டிய திருடர்கள்….!

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை மூக்குறம்குளம் பகுதியில் பண்ணையாளர் ஒருவரின் எருமை மாடுகளை மாட்டு பட்டிக்குள்ளேயே இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் இன்று பதிவாகியிள்ளது. குறித்த சம்பவம்  தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது நேற்றைய தினம் இரவு வேளை எருமை மாடுகளை காலைக்குள்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் தேடுநர்கள் …! சிறிமோகன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழில் தேடுநர்கள் உள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தொழிற்சந்தை நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,... Read more »

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏ்ற்பாட்டில் மாபெரும் தொழிற்சந்தை

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளிற்கான. தொழிற்பயிற்சி, உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான மாவட்ட தொழிற்சந்தை இன்று இடம்பெற்றது. கல்வி அமைச்சின் திறண்கள் அபிவிருத்திப்பிரிவு மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வு... Read more »

ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய மட்டக்களப்பு காணி ஆணையாளர் பணி நீக்கம்!

மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க அறிவித்துள்ளார். விமல்ராஜ் மீது சுமத்தப்பட்ட ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் உண்மை என தெரிவித்து அவரை குற்றவாளியாக கருதி   காணி... Read more »

மன்னாரில் இடம்பெற்ற கோர விபத்து! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி – இருவர் படுகாயம்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடம்பனில் இருந்து உயிலங்குளம் நோக்கி வயோதிபர் ஒருவர்... Read more »

இலங்கைக்கான கடன் திட்டத்தை அங்கீகரித்த IMF! சீனாவின் நிலைப்பாடு குறித்து வெளியான தகவல்

நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கு கொள்ளுமாறு சீனா வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இலங்கைக்கான 3 பில்லியன் டொலர் கடன்... Read more »

மட்டக்களப்பில் இந்து மதத்தை இழிவு படுத்துவததை கண்டித்து இந்து குருமார் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து மதத்தையும் தெயவங்களையும் சமூகவலை தளங்கள் ஊடாக இழிவுபடுத்துவதை கண்;டித்து மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை( 21) இந்து குருமார்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றயத்தின் தலைவர் கணேசா லோகநாதகுருக்கள் தலைமையிலான இந்து குருமார் காந்திபூங்கால் ஒன்றிணைந்தனர். இதன்... Read more »

சாவகச்சேரியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதான வீதியில் அரசடிச் சந்தியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து. யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளிளோடு மோதுவதை தவிர்ப்பதற்காக எதிர் திசையில் திடீரென திருப்பிய பொழுது... Read more »

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு…!

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து கிராமத்தை பாதுகாக்கும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மகா சக்தி பெண்கள் அமைப்பின் உருத்திரபுரம் கிழக்கு பெண்கள் குழுவின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டு முதலான குற்ற செயல்கள்,... Read more »

தவறான முடிவெடுத்து யுவதி உயிர்மாய்ப்பு

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை இன்றையதினம் பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி என... Read more »