பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த சசிகரன் கிங்சிகா (வயது- 06) என்ற சிறுமியே உயிரிழந்தவராவார். மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும்... Read more »
பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறும் இலங்கையர்களை தடுப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தகவலை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளரும் இந்திய பணிப்பாளருமான பென் மெல்லர் மற்றும்... Read more »
தையிட்டி விகாரை திறக்கப்பட்டுவிட்டது. நிலத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் ஒரு தரப்பு இதுபோன்ற விடயங்களைச் செய்யமுடியும். அந்த விகாரை விவகாரத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான்.அதேசமயம் அந்த விவகாரமானது தமிழரசியலின் இயலாமையை நிரூபிக்கும் ஆகப் பிந்திய எடுத்துக்காட்டுகளில் ஒன்று. அந்த விகாரை... Read more »
பருத்தித்துறை தம்பசிட்டி பூகற்கரை கலைமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்றைய தினம் 27.05.2023 மிகவும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. கலைமகள் முன்பள்ளி நிர்வாக குழு தலைவர் யோகரத்தினம் சசிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மைதானம்... Read more »
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று ஜப்பானின் சவாராவில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரான ஜப்பான் பிரதம சங்கநாயகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியுடன், ஜனாதிபதி பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க, கலாநிதி துன்ஹிட்டியவ தம்மாலோக தேரர் மற்றும்... Read more »
57 வயதான பெண்ணை கத்தியால் குத்தி கொன்று சடலத்தை காட்டில் வீசிய 24 வயது இளைஞனை கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்லுன்ன, பதுரலிய ஹடிகல்ல பகுதியை சேர்ந்த லீலாவதி விக்கிரமசிங்க என்ற 57 வயதான பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். Read more »
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம்(26.05.2023) பதிவாகியுள்ளது. குறித்த சிறுமி பாடசாலை முடித்து மதியம் வீடு வந்த போது அயல் வீட்டுகாரர் விறகுடன் நின்ற தனது... Read more »
கடந்த 27.04.2023 அன்று டுபாயில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த கமலதாஷ் நிலக்சன் (வயது 26) அவர்களது உடலம், சம்பவம் நிகழ்ந்து ஒரு மாதத்தை அண்மித்த நிலையில் நேற்று முன்தினம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. இவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலையாக சந்தேகிக்கப்பட்ட வேளை,... Read more »
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் கடந்து செல்லும் வேளையில் தமிழ்த் தேசியத் தரப்புக்களிடம் வெறும் தேர்தல் அரசியலும் வெற்றுக் கோச போராட்டங்களும் ஆங்காங்கே கத்திக் கலைவதுமாக நடக்கிறதே தவிர போராட்டங்களுடன் ஒரு ராஜதந்திர நகர்வு எதுவும் இல்லை. தமிழர் தரப்பாக ஒன்று பட்டு... Read more »
பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்யப்படும் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ( HRCSL ) யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம், அரச மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு சிவில் போராட்டங்களைக்... Read more »