ஜப்பானில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரைச் சந்தித்தார் ஜனாதிபதி!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று ஜப்பானின் சவாராவில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரான ஜப்பான் பிரதம சங்கநாயகத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதியுடன், ஜனாதிபதி பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்க, கலாநிதி துன்ஹிட்டியவ தம்மாலோக தேரர் மற்றும் ஜப்பானில் உள்ள விகாரையில் பணிபுரியும் கொஸ்வத்தே பாலித தேரர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews