யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இலங்கை முதலுதவிச் சங்கம், இந்து சமயத் தொண்டர் சபையினரால் மாணவர்களுக்கு முதலுதவி, தலைமைத்துவம், வீதி ஒழுங்கு, ஆன்மீகம் ஆகிய தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்ட 25. மாணவர்களுக்கு நேற்று 26/05/2023 காலை 7:45 மணியளவில் சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். ... Read more »
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பசுமை திட்டத்திற்கான நிதி சேகரிப்புக்கா கிளி பீப்பிலின் எடின்புரோ மரதன் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. அதற்கு ஆதரவாகவும் வலுச் சேர்க்கும் வகையிலும் கிளிநொச்சியில் பரந்தன் சந்தியில் இருந்து கிளிநொச்சி பசுமை பூங்கா வரை அடையாள மரதன் நிகழ்வு 7.30 மணிக்கு... Read more »
ஞானச்சுடர் 305 ஆவது மலர் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக நேற்று 26/05/2023 சிறப்பாக இடம்பெற்றுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரின் 305 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்வில் வெளியீட்டுரையினை இளைப்பாறிய பல்கலைக்கழக ஒழுங்காற்று உத்தியோகத்தர் .ஐ.கோ. சந்திரசேகரம், மதிப்பீட்டுரையினை ... Read more »
நாட்டின் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையால் அபாயக் கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய தினம் (26.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வலி நிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகளுக்கான மருந்துகள் உட்பட 120க்கும் அதிகமான மருந்துகளுக்குப் பற்றாக்குறை... Read more »
பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர்... Read more »
பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து றொட்டி. உரிமையாளரிற்கு 45,000/= தண்டம்… கடந்த 09ம் திகதி ஆனைப்பந்தியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கொத்து றொட்டி வாங்கிய ஒருவர், பழுதடைந்த இறைச்சியுடன் கொத்துறொட்டி காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசனிற்கு முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து மாநகர சுகாதார... Read more »
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில், பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளிடம் விரைவில் கையளிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அனைத்து அதிபர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார். எக்காரணம் கொண்டும் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுக்களை, பரீட்சார்த்திகளிடம்... Read more »
வெயங்கொட, வந்துராவ பகுதியில் இரண்டு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர். அதே பகுதியில் வசித்து வந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். புகையிரத பாதையில் பயணித்தபோது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் குறித்த இளைஞர்கள் மோதியதில்... Read more »
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் வைத்து 23 வயதுடைய நபர் ஒருவர் இன்றையதினம் 20 லீட்டர்கள் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளதாகவும்,... Read more »
இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்படமான வெண் சங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்த மூத்த கலைஞர் திரு சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன் நேற்றையதினம் (24) வயது மூப்பு காரணமாக, யாழ். கந்தர் மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். இவர் கடந்த 26.10.1936ஆம் ஆண்டு... Read more »