க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் வேண்டுகோள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில், பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளிடம் விரைவில் கையளிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அனைத்து அதிபர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எக்காரணம் கொண்டும் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுக்களை, பரீட்சார்த்திகளிடம் வழங்காது அதிபர்கள் தடுத்து வைக்கக் கூடாது எனவும், நுழைவுச் சீட்டுகளை தடுத்து வைத்து பரீட்சார்த்திக்கு பரீட்சைக்குத் தோற்ற முடியாதிருந்தால் அதற்கு அதிபரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews