யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் உயிரிழந்த இருவருடைய பீ.சி.ஆர் அறிக்கைக்காக காத்திருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி யாழ்.பருத்தித்துறையில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், சந்தேகத்திற்குரிய மரணங்கள் தொடர்பில் பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறப்படுகின்றது. கரவெட்டியைச் சேர்ந்த... Read more »
பருத்தித்துறை சிவன் கோவிலில் நித்திய பூசை நடாத்த அனுமதிக்க கோரி முதியவர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை சிவன் கோயில் எதிர்வரும் 21ம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு ஆலய... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் சற்றுமுன்னர் ஏற்பட்ட வீதி விபத்தில் மூவர் படுகாயம்மடைந்துள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ9வீதியூடாக கிளிநொச்சி நோக்கி ஈருருளியில் பயணித்து கொண்டிருந்த இரு பெண்கள் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இரு... Read more »
கிளிநொச்சியில் இராணுவ சீடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி நிறைவு செய்யப்பட்டது. கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் நேற்று முந்தினம் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் குறித்த பகுதியை சட்ட வைத்திய அதிகாரி மற்றும்... Read more »
இரத்மலானையில் கொள்கலன் லொறி ஒன்றிற்குள் சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இரத்மலானை சுமங்கல வீதியிலுள்ள பிரதான ஆயுர்வேத தயாரிப்பு நிறுவனத்திற்கு பொருட்கள் கொண்டு சென்ற சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புலத்சிங்கல கோவில் வீதி பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் என... Read more »
பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயணிகள் தடுப்பூசி பெற்றிருப்பதை கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்த நடைமுறை... Read more »
யாழ்.போதனாவைத்திய சாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரியில் அனேகமான மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பலர் வீடுகளில் இருந்து குறித்த பாடசாலைக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாதிய பயிற்சியை மேற்கொள்ளும் நிலையில் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா... Read more »
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலைதாரி ஒருவரின் தந்தையை நிதிமன்றம் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்துள்ளது. கொழும்பு கொச்சிக்டை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது அலவ்தீன் அஹமட் முவான் என்ற நபர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருந்தார். தற்கொலைத் தாக்குதல்தாரியான அஹமட் முவானின் தந்தையை கொழும்பு... Read more »
நாட்டில் நாள்தோறும் பதிவாகி வரும் கோவிட் மரணங்களுக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்று தீவிரமடைவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நோய்த் தொற்று பரவவில்லை... Read more »
நாட்டில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பொன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும்... Read more »