கிளி தொற்றுநோய் சிகிச்சை நிலையத்திற்கு 8 பெறுமதியான உதவி…!

கிளிநொச்சி கொவிட் தொற்று நோயியல் சிகிச்சை நிலையங்களிற்கு 8 லட்சத்து 50ஆயிரம் பெறுமதியான உழநல பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.  சுவிஸ் மக்களின் நிதி உதவியுடன் சாந்திகம் நிறுவனத்தினால் குறித்த பொருட்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் குறித்த பொருட்கள் கையளிக்கப்பட்டது. குறித்த நிறுவனத்தின்... Read more »

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலா மையமாக மாற்ற முயற்சி….!

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் பூநகரியில் இடம்பெற்றது. அண்மையில் குறித்த திட்ட வரைபு தொடர்பில் இரணைமடு நீர்பாசன பொறியியலாளர் செந்தில்குமரனால் வழங்கப்பட்ட நிலையில் சமூக மட்டத்தில் பெரும்... Read more »

புகைப்பட பிடிப்பாளர்களுக்கு அடையாள அட்டை….!

யாழ் மாவட்ட புகைப்பட பிடிப்பாளர் கூட்டுறவு  சங்க வடமராட்சி வலய அங்கத்தவர்களிற்க்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அதன் தலைவர் திரு. திருச்செல்வம் தலைமையில் பருத்தித்துறை தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம் பெற்றது. இதில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையை தொடர்ந்து... Read more »

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குருதி அவசர தேவை…!

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு குருதி தேவைப்படுவதாக குருதிப் பிரிவு தெரிகிக்கின்றது. AB, B குருதிவகை பற்றாக்குறை காணப்படுவதாகவும், கொவிட் தடுப்பூசி நாடளாவிய ரீதியில் செலுத்தப்படுவதால் குருதி தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குருதி கொடையாளர்கள் தாமாக முன்வந்து குருதி கொடை வழங்கி வருகின்றனர்.... Read more »

இறுதி ஆயுதமாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம்…!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இறுதி ஆயுதமாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார். நாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின்... Read more »

பாலத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கடலினுள் விழுந்த கே.கௌதமன் (வயது 31) எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.  அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்... Read more »

கடலுக்கு குளிக்கச் சென்ற முதியவர் சடலமாக மீட்பு

கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவரை நீண்ட நேரமாகியும் காணாத நிலையில் காலை 8.30 மணியளவில் சடலமாக கரையொதுங்கினார். அப்பகுதியை சேர்ந்த மனுவேல் செபஸ்டியன்... Read more »

வவுனியா நகரசபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபைக்கு இரு புதிய உறுப்பினர்கள் நியமனம் -!

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா நகர சபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபையின் இரு உறுப்பினர்கள் பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு மேலும் இருவர்கள் ஈழ மக்கள் புரட்சிகர... Read more »

வாள் வெட்டு சந்தேகநபர் அளவெட்டியில் கைது…!

யாழ்.அளவெட்டி – நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடாபுடைய ஒருவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு்ள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் ஒரு கொரோனா விடுதி தயார் நிலையில்!

யாழ்.மாவட்டத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் ஒரு கொரோனா சிகிச்சை விடுதி அமைக்கப்பட்டுள்ளது.  மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, போதனா வைத்தியசாலையில் இரு விடுதிகள் இயங்கி... Read more »