மருதங்கேணி தெற்கு தாளையடி பகுதியில் அதிகளவில்  வெடிபொருட்கள் மீட்ப்பு…!

மருதங்கேணி தெற்கு தாளையடி பகுதியில் தனியார் ஒருவர் தனது காணியை துப்பரவு செய்தவேளை அதிகளவான வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது.
 இது தொடர்பில் உடனடியாகவே குறித்த காணி உரிமையாளரால் போலீஸ் , சிறப்பு அதிரடிப்படை, ராணுவத்தினருக்கும்  தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று குறித்த பகுதியில் அகழ்வு பணியில் ஈடுபட்டு பெருமளவு அபாயகரமான வெடி  பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
 குறித்தபடி பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு அதிரடிப்படையினர் பொலிஸார் ஊடாக மேற்கொண்டு வருவதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இச்சம்பவம்  மதியம் இடம்பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews