பாகிஸ்தானில் பேரழிவு..! பலி எண்ணிக்கை 1,033 ஆக உயர்வு

பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 1,033 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்து வரும் பருவ மழை காரணமாக இந்த இறப்புகள் பதிவாகியுள்ளது. இது நாட்டின் “தீவிர காலநிலை பேரழிவு” என்று தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம்... Read more »

இந்தியா செல்லும் இலங்கை அகதிகளை தடுக்க நடவடிக்கை

இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்குடன் இந்தியா செல்லும் இலங்கை அகதிகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை இந்திய கடலோர காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இலங்கையில் இருந்து மக்கள் இந்தியாவிற்குள் பிரேவேசிக்காமல் இருப்பதை உறுதி செய்வதாக இந்திய கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் வீரேந்திர சிங் பதானியா தெரிவித்துள்ளார்.... Read more »

உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரம் வெளியானது

2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய,மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில... Read more »

சூரியன் இன்று உச்சம் கொடுக்கும் பிரதேசங்கள்! பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்ந்து நீடித்து வருகின்றமையினால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அடுத்த சில... Read more »

கோட்டாபய ராஜபக்சவிற்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்!

தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதற்கு சட்ட தடைகள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ச தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த ஜனாதிபதியல்ல, பதவியை இராஜினாமா செய்து தனது பொறுப்பை கைவிட்ட ஜனாதிபதி,... Read more »

இலங்கை முதலுதவிச் சங்க இந்துசமயத் தொண்டர் சபைத் தொண்டர்கள் கௌரவிப்பு….!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்  பெரும் திருவிழாவின் சப்பறம், தேர், தீர்த்தத்திருவிழாக்களின் போது தொண்டர் சேவையாற்றிய இலங்கை முதல் உதவிச்சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் தொண்டர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (27.08.2022) நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் ... Read more »

ஐ.நா.வில் பிரித்தானியா தலைமையில் புதிய பிரேரணை : அமெரிக்காவும் இணை அனுசரணை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டள்ளது. பிரித்தானியா... Read more »

நாட்டையே கழுவி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது! – சஜித்!

எதிர்க்கட்சியை அரசு கழுவி ஊற்றினாலும்,  இன்று நாட்டையே கழுவி ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பஹுவ தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “சர்வகட்சி... Read more »

பருத்தித்துறை போலீசாரால் நடாத்தப்பட்ட நடமாடும் சேவை….!

பொலீஸ் 154 வது தினத்தை முன்னிட்டு நடமாாடும் சேவை நேற்று 27.08 குடத்தனை வடக்கு அ.மி.த.க பாடசாாலையில்  உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்மால் கொட வழிகாட்டலில் , பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி மகிந்த சமரசிங்க தலமையில் காலை 10.00 தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை இடம் பெற்றது. இதில் பொது மருத்துவம்... Read more »

தென்மராட்சி வலயத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி முன்னிலை….!

இன்று வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின்படி தென்மராட்சஜ வலையத்தில் மீசாலை வீரசிங்கம் மத்தி கல்லூரி முன்னிலை பெற்றுள்ளது. இதில் குணராசசேகரம் தமிழினி வணிக பிரிவில் 3 அதி திறமை சித்தியும்,  விஞ்ஞான பிரிவில் 1 மாணவர் 3 அதி திறமை... Read more »