யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகராக பணியாற்றிய வைத்திய கலாநிதி யாழினி மகேந்திரனே பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் பணியாற்றிய வைத்திய கலாநிதி... Read more »
பாணந்துறை சுற்றுலா ஹோட்டலில் இன்று (16) நடைபெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மணமகன் தரப்பில் இருந்து வந்த கண்டி மற்றும் கடுகண்ணாவ பிரதேசவாசிகள் குழுவொன்றே இவ்வாறு கைது... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை அமைப்பாளரின் அலுவலகம் மீது இனந்தெரியாதோர் கல்வீச்சு தாக்குதல்!
ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும் மனித உரிமைகள் மற்றும் சமூக செயற்பட்டளாருமான முருகவேல் சதாசிவம் அவர்களின் நல்லூரில் அமைந்துள்ள அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்கள் 15/09/2022 வியாழக் கிழமை இரவுநேரம் 10:30 மணியளவில் கல் வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்... Read more »
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரியை எதிர்த்து விளையாடிய கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் சம்பியனாகி தேசிய மட்டத்தில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. 5 ஒவர்கள் கொண்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி அக்கராயன் மகா வித்தியாலயம் 61 ... Read more »
சட்டவிரோதமாக. இலங்கையிலிருந்து புலம்பெயர முற்பட்ட 26 பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில்... Read more »
தியாக தீபம் திலீபன் அவர்களுடைய நினைவேந்தலுக்கான பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான ஒன்றுகூடல் நாளை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம் பெறவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு ... Read more »
நாளை (17) முதல் 19ஆம் திகதி வரையான நாட்களுக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. விபரங்களின் படி, குறித்த நாட்களில் 1 மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி... Read more »
ஓய்வு பெறவுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள்தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாயதுன்னே... Read more »
ஸ்மார்ட்போனை அப்டேட் செய்வதால் பல்வேறு மென்பொருள் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த 2 மாதத்திற்கு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய வேண்டாம் என அவரச அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி, கூகுள் பிக்சல் என பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தங்களது பயனர்களுக்காக பல்வேறு... Read more »
மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதார உதவி பணியாளர்களுக்கு ஒரு வேளை உணவை வழங்குவது பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களை விநியோகிப்போருக்கு சரியான முறையில் பணத்தை வழங்கவில்லை என்பதால், வைத்தியசாலைகளுக்கு உணவு, பழங்கள், சூப்,... Read more »