சந்தேக நபரை எதிர்வரும் 05 அம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெட்ரோசோ தோட்டத்தில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நேற்று (27) கைதுசெய்யப்பட்ட நபர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொகவந்தலாவை தோட்டத்தைச்... Read more »
கட்டுகஸ்தோட்டையில் கிரேனின் உதவியுடன் மரக் குற்றிகளை இறக்கும் போது அதன் கேபிள்கள் அறுந்து மரக்குற்றிகள் கீழே வீழ்ந்ததால் மர ஆலை ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அக்குரணை பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய நபர் என இனங்காணப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் கிரேன் சாரதி... Read more »
நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, கொடபல பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தில்... Read more »
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு அரசடி பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் சிறுமியின் சடலம் கிடப்பதாக நேற்றிரவு கிடைத்த தகவல்களை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். சடலமாக மீட்கப்பட்ட சிறும... Read more »
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அவதானம் இன்னும் குறைவடையவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் செபஸ்தியார் ஆலயத்துக்கு அண்மையில் ஒருவர் மது அருந்திவிட்டு குடும்பத்தினருடன் முரண்படுவதாக பொலீசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து அவ்விடத்துக்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் உத்தியோகத்தர்கள் சென்ற போது குறித்த நபர் பொலிசாருடன் முரண்பட்டதோடு போலீசாரையும் கத்தியால் குத்த... Read more »
வவுனியாவில் கொரோனாத் தொற்றால் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவரே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த 55... Read more »
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ள நிலையில் அரிசி வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களின் அழுத்தமே அரசின் தீர்மானத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது. அரிசி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மாற்றாவிட்டால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு தீவிரமடையும் என அரிசி வியாபாரிகள்... Read more »
யாழ்.வலி,வடக்கில் கடந்த ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளை மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட பகுதிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் மற்றும்... Read more »
வல்வெட்டித்துறைப் பகுதியில் காணி துப்பரவு செய்த போது குண்டு ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது பண்பாட்டுத்துறை பகுதியில் பற்றைக் காணி ஒன்றைத் துப்பரவு செய்த போது வெடிக்காத நிலையில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த குண்டி பெயர் அறிய முடியாத... Read more »