![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/09/k-1-696x391-1.jpg)
கட்டுகஸ்தோட்டையில் கிரேனின் உதவியுடன் மரக் குற்றிகளை இறக்கும் போது அதன் கேபிள்கள் அறுந்து மரக்குற்றிகள் கீழே வீழ்ந்ததால் மர ஆலை ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அக்குரணை பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய நபர் என இனங்காணப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் கிரேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.