அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

சந்தேக நபரை எதிர்வரும் 05 அம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெட்ரோசோ தோட்டத்தில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நேற்று (27) கைதுசெய்யப்பட்ட நபர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை தோட்டத்தைச் சேர்ந்த 62 வயது நபரே இவ்வாறு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலுக்கு அமைவாக குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார், மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபரை கைதுசெய்தனர்.

இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை  எதிர்வரும் 5ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews