பல்கலைக்கழகத்துக்கு செல்லவுள்ள கலைபீட மாணவர்கள் கௌரவிப்பு!

கிளிநொச்சியில், பல்கலைக்கழகத்துக்கு செல்லவுள்ள கலைபீட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கிளிநொச்சி கூட்டுறவாளர் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை கௌரவித்தார். நிகழ்வில்... Read more »

3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்!

3,500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிவாயுவினை தரையிறக்குவதில் சிக்கல்... Read more »

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடல் பகுதிக்குள், அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில், 6 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம், இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கை மீனவர்களின் விசைப்படகு ஒன்று கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்போது குறித்த படகிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்களும், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.... Read more »

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் முன்னெடுத்த போராட்டம் மக்கள் எழுச்சியின் ஆரம்பம்..!

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் முன்னெடுத்த போராட்டமானது, மக்கள் எழுச்சியின் ஆரம்பம் என்றும் இதனை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்... Read more »

அகில இலங்கை சைவ மகா சபையின் தெய்வத்தமிழ் தோத்திரத்திரட்டு வெளியீட்டு விழா நுவரெலியாவில் இடம் பெற்றது!

அகில இலங்கை சைவ மகா சபையால் தெய்வத்தமிழ் தோத்திரத்திரட்டு வெளியீட்டு விழா இன்று நுவெரலியாவில் காயத்திரி பீடத்தில் இடம் பெற்றது. மாதாந்தரீதியாக நுவெரெலியா காயத்திரி பீடத்தில் இடம்பெறுகின்ற பௌர்ணமி தின மகாயாகத்தினை தொடர்ந்து இவ் நூல் வெளியீட்டு விழா வைபவரீதியாக வெளியீடு செய்யப்பட்டது. இதன்... Read more »

13 போதும், நடைமுறை படுத்துங்கள்….! சி.சிறிதரன் பா.உ!

கூட்டுறவு சமஸ்டியே பொருத்தம் எனவும், பொது சன வாக்கெடுப்பு நடார்த்த வேண்டும் எனவும் இந்தியா கூறும் நிலையில் 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் போதும் என நாங்கள் கேட்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார். தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலில்... Read more »

சதாவதானி நா.கதிரவேற்பிள்ளையின் 115 வது குருபூசை தினமும், ஊடகவியலாளர் தில்லைநாதன் கௌரவிப்பும்…..!

சதாவதானி நா.கதிரவேற்பிள்ளையின் 115 வது குரு பூசை தினமும், ஊடகவியலாளர் சி.திலஸலைநாதன் கௌரவிப்பு நிகழ்வும் சதாவதானி சனசமூக நிலையத்தில் இடம் பெற்றது. மேலைப் புலோலி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத் தலைவர் நடராசா நிறஞ்சன் தலமையில் பிற்பகல் 6:30 க்கு ஆரம்பமான நிகழ்வில் கோப்பாய்... Read more »

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். Read more »

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு தலையிடி – அதிகரிக்கும் விலை!

எதிர்வரும் வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் மீண்டும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்தாவிட்டால் இந்த நிலை ஏற்படும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »

சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு.

ரஷ்யா உடனடியாக உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இராணுவப் பிரிவுகள் அல்லது அதன் ஆதரவு படைகளில் உள்ளவர்கள், எந்த இராணுவ நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும்... Read more »