சிலாபம் வென்னப்புவ கடற்கரையில் கரையொதுங்கிய சிறுவனின் சடலம்.

சிலாபம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சடலம், வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுவனுடையதாக இருக்கலாம் என... Read more »

பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நடவடிக்கை.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகள் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துணைவேந்தர் மேலும் தெரிவித்தார். இதற்கமைவாக பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்த... Read more »

50 இலட்சம் பேருக்கு உணவு நெருக்கடியால் நேரடி பாதிப்பு.

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) காலை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உணவு நெருக்கடியானது... Read more »

வீதியில் மோ. சைக்கிளில் பயணித்த தம்பதிகளிடம் தங்க நகைகள் அபகரிப்பு! கோப்பாய் பொலிசாரிடம் இருவர் சிக்கினர்.

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9ஆம் திகதி கல்வியங்காடு – செம்மணி, ஆடியபாதம் வீதியில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த தம்பதியிடம் தாலிக் கொடி, சங்கிலி என 15... Read more »

இந்தியா யாழ்ப்பாணம் கடல் மற்றும் ஆகாய போக்குவரத்தை ஆரம்பிக்க அமைச்சர்கள் தலைமையில் கள ஆய்வு..

இந்தியாவிலிருந்து கடல் மற்றும் ஆகாய போக்குவரத்து சேவையை முன்னெடுக்க  பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்து அமைச்சர்களான நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் அமைச்சர் டக்ளஸ் இன்று  சனிக்கிழமை நேரில் ஆராய்ந்தனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடுத்து... Read more »

தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக உத்தரவாதம் தராமல் தமிழ் மக்கள் எவ்வாறு போராட்டத்தில் கலந்து……!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

“கோத்தா கோகம” போராட்டக்களம் தேக்கமடையத் தொடங்கியுள்ளது. ரணில் பிரதமராக பதவியேற்றமை, அதன் காரணமாக மேற்குலகம் ரணிலைப் பாதுகாக்க முனைந்தமை, அரச சார்பற்ற அமைப்புக்களின் மந்தமான பங்களிப்பு, மார்ச் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறை  அரசாங்கத்தை மட்டும் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளையும் பகைக்க முற்பட்டமை, தமிழ்... Read more »

பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் அதிரடி_ஒரே நாளில் கைதான திருடர்கள்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த (16) அன்று ஹாட்வயார் ஒன்றினுள் இரு நபர்கள் புகுந்து இரண்டு லட்சத்து எண்பதாயிரத்து நூற்றி ஐம்பது ரூபா பெறுமதியான வீட்டு மின் பாவணைக்கு பொருத்து பொருட்களை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக... Read more »

கல்மடுநகர் பகுதியில் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து ஒருவர் மரணம்….!

கிளி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து ஒருவர் மரணமடைந்திருக்கிறார். இதில் கல்மடு நகரைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளவரசன் கலையரசன் என்பவர் மரணம் அடைந்திருக்கிறார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை... Read more »

பளையில்‌ தனியாக இருந்த வயோதிப பெண்ணிடம் நகை மற்றும் பணம்‌ கொள்ளை…!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்றைய தினம் (17) நேற்று  நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது முல்லையடி பகுதியில் தனியாக வசித்து வந்த  வயோதிப பெண் ஒருவரின் வீடொன்றினுள்‌ நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த... Read more »

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள்  தங்களை விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் உருக்கமான கோரிக்கை….!

இந்தியா தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 104 பேரும் இன்றைய தினம் தாம் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து 30ஆவது நாளாகிய இன்று இறந்த உடலை தாங்கிச் செல்கின்ற பாடையை வடிவமைத்து தங்களை விடுதலை செய்யுமாறு கோரி ஒரு போராட்டத்தை... Read more »