பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் அதிரடி_ஒரே நாளில் கைதான திருடர்கள்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த (16) அன்று ஹாட்வயார் ஒன்றினுள் இரு நபர்கள் புகுந்து இரண்டு லட்சத்து எண்பதாயிரத்து நூற்றி ஐம்பது ரூபா பெறுமதியான வீட்டு மின் பாவணைக்கு பொருத்து பொருட்களை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிசாரிடம் முறைப்பாடு ஒன்றும்‌பதிவு‌ செய்யப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில்  பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.அதனடிப்படையில் வவுனியா சாந்தசோலை பகுதியில் ஒருவரும் கிளிநொச்சியில் ஒருவருமாக இருவர் (16) ம் திகதி மாலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடிச்சென்ற பொருட்களும் மீட்கப்பட்டன.
கைதான இருவரையும் நேற்று 18 கிளிநொச்சி நீதவான் முன்னிலைபடுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews