மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்படும்……!எரிசக்தி அமைச்சர்!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டியேற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போது அமைச்சர் இதனை தெரிவித்தார். கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் என்பவற்றை குறைந்த விலைகளிலேயே அரசாங்கம் வழங்கி... Read more »

இஸ்லாமியரின் மக்காவில் தமிழிலும் சொற்பொழிவு!

இஸ்லாமியர்களின் முக்கிய புனித தலங்களில் ஒன்றான மக்காவில் இனி தமிழிலும் அரஃபா நாள் சொற்பொழிவு ஒலிபரப்பப்படவுள்ளது. இஸ்லாத்தின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா நாள் பிரசங்கத்தின் மொழிபெயர்ப்பு ஏற்கனவே 10 மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது. இந்நிலையில், தமிழ் உட்பட 4 மொழிகளில் இனி சொற்பொழிவு மொழிபெயர்க்கப்பட்டு... Read more »

நாளை முதல் கிளிநொச்சி விவசாய போதனாசிரியர்கள் போராட்டம்.

விவசாய உற்பத்தியை கருத்தில் எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை இல்லை எனின் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தம் – விவசாய போதானாசிரியர்கள் விவசாய உற்பத்தியை கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை இல்லை எனில்  அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தம் -விவசாய போதானாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில்... Read more »

அக்கராஜ மன்னனுக்கு இன்று நினைவஞ்சலி….!

கிளிநொச்சி அக்ராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள அக்ராயன் மண்ணின் வரலாற்று மன்னன் அக்கராசனுடைய நினைவேந்தல் இன்று ஜூலை 5 காலை பத்து மணிக்கு இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாழிகிதன் மற்றும் கரைச்சி பிரதேச சபை  உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும்... Read more »

எரிபொருளை வழங்க அரச பேருந்து சாலையினர் இழுத்தடிப்பு…! தனியார் பேருந்து சேவையினர் போராட்டம்.

தனியார் பேருந்து சேவையினருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருளை வழங்க அரச பேருந்து சாலையினர் இழுத்தடிப்பு செய்த நிலையல் மாலை 6 மணிவரை அப்பகுதியில் பரஸ்பர கருத்து முறண்பாடு ஏற்பட்டிருந்தது. டீசல் வழங்கினால்தான் பேருந்தினை அப்புறப்படுத்துவோம் என தெரிவித்து தனியார் பேருந்து சேவையினர் கோரி வந்தனர். இந்த நிலயைில் தமது பேருந்துகளை... Read more »

மேலும் எண்மர் இந்தியாவில் தஞ்சம்….!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மேலும் எண்மர் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 8 பேர் அகதிகளாக அரிச்சல்முனை பகுதியில் தஞ்சம், ஏற்கனவே 26 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் சென்றுள்ளனர். Read more »

எரிபொருள் பெற்று தரக்கோரி கிளிநொச்சி கிராம சேவையாளர்கள் கோரிக்கை.

எரிபொருள் பெற்று தர நடவடிக்கை எடுத்து தரக்கோரி நேற்று  04/07 கிளிநொச்சி மாவட்டத்தில் பணி புரியும் கிராம சேவையாளர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்திருந்தனர். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன்  கிராம  சேவையாளர்கள்  கலந்துரையாடலில்  நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 12. பேருக்கும் 08 ம் திகதிவரை விளக்கமறியல்….!

நேற்றை தினம்  பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட பன்னிரண்டு எல்லை தாண்டிய  இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 8 ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம்  கடற்படையால் கைது செய்யப்பட்ட பன்னிரண்டு மீனவர்களையும் கடற்றொழில் மற்றும்... Read more »

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் இராணுவத்தினரால் மீட்பு.

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (04.07.2022) இரவு பூநகரி வெட்டுக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் ஒருதொகையே இவ்வாறு இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத்... Read more »

மர்ம நபரினால் பிரதேசசபை பெண் அதிகாரி குத்திக் கொலை..!

அறைக்குள் நுழைந்த மர்ம நபரினால் லங்காபுர பிரதேசசபை தலைமை நிர்வாக அதிகாரி குத்திக் கொல்லப்பட்டுள்ளார். யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த அதிகாரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »