முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் கைதான 10 பேருக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு – முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் கைதான 10 பேர், மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது குறித்த பத்து பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

முள்ளியவளை பிரதேசத்தில் இரண்டு வாகனங்களில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினர் கொடுத்த தகவலுக்கமைய, இரண்டு வாகனங்களும் அதில் இருந்த 10 பேரையும் முள்ளியவளை பொலிசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து ஸ்கானர் இயந்திரம் மற்றும் பூசை வழிபாட்டுக்குரிய பொருட்களும் மீட்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews