ஜனாதிபதி இராணுவத் தலைமையகத்திற்கு திடீர் விஜயம்.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையால் கொழும்பு நகரம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் அக்குரே கொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதும் இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.... Read more »

சுற்றுலாத்துறையினருக்கு விசேட எரிபொருள் அட்டை அறிமுகம்!

சுற்றுலாத்துறையின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதி கியு.ஆர் குறித்து இன்று காலை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே, எரிசக்தி அமைச்சர்... Read more »

தன் மீதான மோசடிக் குற்றச்சாட்டை கைவிடுமாறு த.சத்தியமூர்த்தி கோரிக்கை!

தன் மீதான ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிடுமாறு கோரி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆதரவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி நாடியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எதிராக, வைத்தியசாலைச் சமூகத்தினரால் பல்வேறு ஊழல், மோசடி, நிர்வாக... Read more »

வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் தீக்கிரை….!

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையின் மருத்தகம் தீக்கிரையாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு, குறித்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.   இதன் போது, மருந்தகத்தில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உட்பட பொருட்கள், தளபாடங்களிற்கு சேதம்... Read more »

கொழும்பு நகரில் இன்று தீவிர பாதுகாப்பு.

கொழும்பு நகரில் இன்று (9ம் திகதி) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு செயற்பாட்டாளர்கள் தயாராகியுள்ளதால், கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பை பாதுகாப்பதற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ்... Read more »

கூட்டமைப்பு எந்த தேவைக்கும் உதவாத இலகு மரம் போன்றது: கா.அண்ணாமலை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பிரச்சினைகள் எதனையும் கண்டு கொள்வதில்லை எனவும் அது எந்த தேவைக்கும் உதவாத இலகு மரம் போன்றது என வடமாகாண கடற்றொழாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று காலை 11:30 மணிக்கு நடத்திய ஊடக... Read more »

இந்திய இழுவை படகுகளுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா..!: வி.அருள்நாதன்

கடற்றொழில் அமைச்சர் கடற்படையினருக்கு இந்திய இழுவை படகுகளை பிடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளதாக கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளார் சங்கங்களின் சம்மேளன தலைவர் என வி.அருள்நாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

சட்டவிரோத விறகு விற்பனையில் ஈடுபட்ட பன்னிரண்டு பேர் கைது…..!

நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக  சவுக்கம் மரத்தை வெட்டி விறகிற்க்காக விற்பனை செய்ய முற்பட்ட 12 பேர் நேற்று காலை பருத்தித்துறை போலீசாரால் கைதுசெய்யப்பட்டு போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன்  இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில்  முற்படுத்தவுள்ளதாக பருத்தித்துறை போலீஸ்... Read more »

அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் – ஞானசார தேரரின் செயலணி பரிந்துரை.

புனர்வாழ்வு மற்றும் சமூக ஒருங்கிணைப்புச் செயற்பாட்டின் பின்னர் ஈழப் போரில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரு நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி பரிந்துரை செய்துள்ளது.... Read more »

எரிபொருள் நிலையத்தில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்.

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டு களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிக்குடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் நேற்று இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக குற்றம்... Read more »