2000 நாட்களை எட்டும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2000 நாட்களை எட்டுகின்ற நிலையில் அன்றைய தினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற... Read more »

யாழில் போலி நாணயத்தாள்களுடன் இளைஞரொருவர் கைது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருட்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடம் 3 கடைகளில் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய்... Read more »

சட்டவிரோதமாக டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது.

புத்தளம் – தில்லையடி பகுதியில் டீசல் எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தே நபரொருவர் புத்தளம் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். டீசலை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பதுக்கி... Read more »

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சிதைத்துவிட்டனர்….!அரசியல் ஆய்வளர் சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கம்.

இங்குள்ள எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வலுவான நிறுவனத் தன்மை கிடையாது. தமிழரசுக் கட்சியில் அது சிறிதளவு இருந்தது. அதை சம்பந்தனும் சுமந்திரனும் சிதைத்து விட்டனர் என சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவர் சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்தார். சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தில் நேற்று (09)... Read more »

இலங்கையில் பெண்களின் பணி நேரம் தொடர்பில் அமைச்சரவையில் திருத்தம்

1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வியாபாரத்தளம் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில், இலங்கையில் பெண்கள் மாலை 6.00 மணிக்குப் பின்னர் பெண்களை பணிபுரிய அனுமதிக்கும் வகையில் திருத்தம் செய்வதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளின் பணி நேரங்களை கருத்திற்கொண்டு, அவுட்சோர்சிங்... Read more »

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பில் சட்டமா அதிபர் ஆட்சேபனை.

காலிமுகத்திடல் போராட்டத்தில் முக்கிய பங்கை வகித்த அருட் தந்தை ஜீவந்த பீரிஸ், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு தொடர்பில் தமக்கு கடும் ஆட்சேபனை இருப்பதாக சட்டமா அதிபர்  உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளரான ஜீவந்த பீரிஸ், தம்மை கைது செய்வதை... Read more »

மின் கட்டணம் 75 வீதமாக அதிகரிப்பு!

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.... Read more »

சுழிபுரம் கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு.

யாழ்ப்பாணம் சங்கானை கோட்டத்திற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு போட்டி நேற்று, கலைமகள் கலையரங்க மைதான வளாகத்தில் இடம்பெற்றது. கலைமகள் முன்பள்ளி முகாமைத்துவ குழு மற்றும் கலைமகள் சனசமூக நிலைய தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் விளையாட்டு நிகழ்வு... Read more »

திருகோணேஸ்வர ஆலயத்தை பாதுகாக்குமாறு கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள்.

திருகோணேஸ்வர ஆலயத்தை பாதுகாக்குமாறு, அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவசர வேண்டுகோள். கௌரவ பிரதமர் அவர்கட்கும், சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருகோணேஸ்வரம் தொடர்பான அவசர வேண்டுகோள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சைவத்திருக்கோவிலாகிய திருக்கோணேஸ்வர திருத்தலத்தை பாதுகாப்பதற்கு உதவுங்கள். ஆலயத்துக்குச்... Read more »

மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் மண்ணெண்ணெய் விநியோகிக்குமாறு எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை!

மண்ணெண்ணெய் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டிருப்பதானால், வடக்கில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு மண்ணெண்ணெய் விநியோகத்தை துரிதமாக விநியோகிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மண்ணெண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை தொடர்பில், சுட்டிக்காட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர்... Read more »