சட்டவிரோதமாக டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் கைது.

புத்தளம் – தில்லையடி பகுதியில் டீசல் எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தே நபரொருவர் புத்தளம் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

டீசலை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பதுக்கி வைத்திருந்த 35 லீற்றர் டீசல் எரிபொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தில்லையடிப் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட டீசலையும் நாளை புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews