சுழிபுரம் கலைமகள் முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்வு.

யாழ்ப்பாணம் சங்கானை கோட்டத்திற்குட்பட்ட சுழிபுரம் மேற்கு கலைமகள் முன்பள்ளியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு போட்டி நேற்று, கலைமகள் கலையரங்க மைதான வளாகத்தில் இடம்பெற்றது.

கலைமகள் முன்பள்ளி முகாமைத்துவ குழு மற்றும் கலைமகள் சனசமூக நிலைய தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது.  இதன் பொழுது மாணவர்களின் குழு விளையாட்டுக்கள், தனி விளையாட்டுக்கள்,பெற்றோர்கள் பங்குபற்றிய நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதோடு, சமகால விடயங்களை தாங்கியவாறாக முன்பள்ளி மாணவர்களின் வினோத உடைப்போட்டியும் இசையும் அசைவும் நிகழ்வு ஆகியனவும் இடம்பெற்றன. விளையாட்டு நிகழ்வில் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews