காங்கேசன்துறையில் 54 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

காங்கேசன்துறை கடற்பரப்பில் 54கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை கடற்படையினர் நேற்று அதிகாலை (06) 3 மணியளவில் கைதுசெய்து காங்கேசன்துறை குற்றதடுப்பு பொலிசாரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய கடற்படையினரால் குறித்த கைது, முன்னெடுக்கப்பட்ட நிலையில் படகுடன் 54 கிலோகிராம் கஞ்சாவினையும் கிளிநொச்சி தர்மபுரம்... Read more »

மசகு எண்ணெயின் விலை மேலும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினமும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.6 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய... Read more »

நிதிப் பிரச்சினையால் மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை கைது!

குருநாகல் பகுதியில் நிதிப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில். ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் தந்தையால் அவரது மகன் ஆயுதமொன்றினால், தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக... Read more »

காட்டு காளான் சாப்பிட்ட மூவர் பலி!

அவுஸ்திரேலியாவின் தெற்கு கிப்ஸ்லாந்தில் காட்டு காளானை சாப்பிட்டதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 66 மற்றும் 70 வயதுடைய இரண்டு சகோதரிகள் ஒகஸ்ட் 4 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் 70 வயதான ஒருவர்,... Read more »

யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் சொலமன் இயற்கை எய்தினார்!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் டேவிட் சதாநந்தன் சொலமன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபராகவும் தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் உப தலைவராக செயற்பட்டதுவும்... Read more »

குழந்தைகளுக்கு எச்சரிக்கை விடுத்த வைத்தியர்கள்!

நிலவும் வரண்ட காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாக காணப்படுவதாகவும் எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகளை குடிக்க கொடுக்க வேண்டும் எனவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்... Read more »

வடக்கு விவசாயிகளுக்கு நன்கொடை திட்டம்: உதவிக்கரம் நீட்டிய ஜப்பான்

ஜப்பானிய உதவியின் கீழ் 8,500 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாயத் திட்டத்தின் கீழ், ஜப்பானிய அரசாங்கம் அனுராதபுரம் மாவட்டம் மற்றும் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு இந்த உரத்தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளதாக... Read more »

பாடசாலைகளில் வருடத்திற்கு ஒரேயொரு பரீட்சை மட்டுமே!

2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளைக் குறைத்து வருடத்திற்கு ஒரு பரீட்சையை மாத்திரம் நடாத்தவுள்ளதாக ஜயவர்தனபுரவில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பாடத் தொகுதியின் முடிவிலும் மதிப்பீடு நடாத்தப்பட்டு அதன் புள்ளிகள் கணினியில் பதிவு... Read more »

இந்திய உள்துறை அமைச்சர் இனப்படுகொலை என்று சொன்னாரா? – ஆய்வாளர் நிலாந்தன்

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் வைத்து ஆற்றிய உரையில் இலங்கையில் இடம்பெற்றது மனிதப் பெரும்படுகொலை என்ற அர்த்தத்தில் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பாளரான அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற... Read more »

மருத கலை கலா மன்றத்தின் பௌர்ணமி விழா…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் மருதகலை கலைமன்றத்தின் பௌர்ணமி விழா நேற்று 05/08/2023 சிறப்பாக இடம் பெற்றுள்ளது. அம்பன் பிங் பொங் விளையாட்டு கழக மைதானத்தில் மருதகலை கலைமன்ற தலைவர் கபில்ராம் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டு... Read more »