யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்கப்பட்டது! 30 பேருக்கு இதுவரை தொற்று உறுதி… |

யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. கொடிகாமம் சந்தையில் இதுவரை எடுக்கப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தையை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. Read more »

மேலும் 161 கொரோணா மரணங்கள் பதிவு…!

இலங்கையில் கொரோணாவால் மேலும் 161 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன. இதுவரை 6,096 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் ஒரே நாளில் அதிகூடிய மரணங்களில் – 83 ஆண்களும்  78 பெண்களும் உள்ளடங்குவதுடன்  60 வயதுக்கு மேற்பட்டோர் 122 பேர் ஆகும். Read more »

கிணற்றினுள் பாய் ஒன்றினால் சுற்றியவாறு சடலம்..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்தில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றிய கிணறு ஒன்றில்  ஆண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார்... Read more »

கொரோனா வைரசை குணப்படுத்த மேலும் 3 மருந்துகளை ஆய்வுக்கு எடுக்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு

உலகையே அச்சுறுத்திவரும் உயிர் கொல்லி கொரோனா வைரசை குணப்படுத்த மேலும் 3 மருந்துகளை ஆய்வுக்கு எடுக்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில்,... Read more »

யாழ்.உரும்பிராயில் வன்முறை கும்பல் அட்டகாசம்! மோட்டார் சைக்கிள் தீக்கிரை.. |

யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more »

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது – மக்களுக்கு சுகாதார அமைச்சின் எச்சரிக்கை –

அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எனவே சுகாதார வழிக்காட்டில்களை பின்பற்றி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

நாட்டில் கடுமையாகும் சட்டம் – வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு எச்சரிக்கை –

முகக்கவசம் அணியும் சட்டத்தை நாட்டில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும்... Read more »

யானைகளை பாதுகாப்போம் சிறுவர்கள் சிறுதுார விழிப்புணர்வு நடைப்பயணம்!

சர்வதேச யானைகள் தினத்தினை முன்னிட்டு , யானைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சியினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனோகரன் சசிகரன் ஏற்பாடு செய்திருந்தார். உலக யானைகள் தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறுவர்கள் யானை முகமூடி அணிந்து , யானைகளை பாதுகாப்போம் என... Read more »

ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான தகவலை அடக்கி வாசித்த வங்கி நிர்வாகம்! 8 ஊழியர்களுக்கு தொற்று.. |

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் கிளையில் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் வங்கி நிர்வாகம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வங்கியின் ஊழியர்கள் சிலருக்கு கடந்த... Read more »

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை –

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 48 வீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த மாதம் மிகவும் ஆபத்தானது எனவும் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 30 வீதமாக அதிகரித்துள்ளது. காணப்படும் நிலைமையை மக்கள் நன்றாக உணர்ந்து அத்தியாவசிய காரணங்களுக்காக அன்றி வீட்டில்... Read more »