மக்கள் இதை செய்ய தவறினால் மின்வெட்டு..! பொதுப் பயன்பாட்டு குழு விடுத்துள்ள அறிவிப்பு.. |

அத்தியாவசியமற்ற அதிக மின்சாரத்தை செலவிடும் உபகரணங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த தவிறினால் அடுத்துவரும் மூன்று மாத காலத்திற்கு மின் துண்டிப்பை ஏற்படுத்த வேண்டிவரும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் ஜனக்க ஏக்கநாயக்க தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,... Read more »

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.. |

வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் வடமத்தி, ஊவா மாகாணங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர் மழை பெய்யகூடும். இதேபோல் இடியுடன் கூடிய மழையுடன்... Read more »

யாழ்.குருநகரில் வெடித்து சிதறிய சமையல் எரிவாயு அடுப்பு..!

யாழ்.குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றய தினம் இரவு சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து தீ பற்றி எரிந்துள்ளது.  இரவு வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தவர்கள், சமையல் முடிந்து அடுப்பை அணைத்துவிட்டு சென்றிருந்த நிலையில் திடீரென எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுடன் தீ பற்றியுள்ளது. எனினும்... Read more »

யாழ் விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…..!

யாழ் வட்டுக்கோட்டை அராலி செட்டியர் மடம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை (12-02-2022) யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.  குறித்த விபத்து சம்பவமத்தில்... Read more »

8 கோடி மதிப்பிலான கொக்கைன் போதை பொருளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற போலீஸ் உட்பட 8 பேர் கைது…..!

இலங்கைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்திய முக்கிய குற்றவாளியான காடல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் பாலமுருகன் உட்பட 8 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் குறித்து தகவல் கிடைத்துள்ளதால் போலீசார் தொடர்ந்து... Read more »

இலங்கை மற்றும் இந்திய மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்:அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க முடிவு:

தமிழக மீனவர்களை சிறை பிடிக்கும் இலங்கை அரசை கண்டித்தும், தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக மீன் பிடி படகுகளை இலங்கை அரசு ஏலமிட்டதற்கு  எதிர்ப்பு தெரிவிக்காத மத்திய அரசை கண்டித்தும் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு  தரையில் அமர்ந்து மீனவர்கள்... Read more »

யாழ்.தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒன்றால் அதிகரிப்பு..!

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை மேலும் ஒன்றால் அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டு யாழ்.தேர்தல் மாவட்டத்துடன் இணைகிறது. கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் அடிப்படையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை  ஒன்றால் குறைந்து... Read more »

வத்திராயனில் மரணமடைந்த மீனவர் குடும்பங்களுக்கு முல்லைத்தீவு மீனவர்கள் உதவி……!

கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு குடும்பத்திற்கும் முல்லைத்தீவு கள்ளப்பாடு மீனவர்கள் இன்று உதவி வழங்கியுள்ளனர். கடந்த மாதம் இறுதி பகுதியில் கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போன நிலையில் கடந்த 31/01/2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட பிறேம்குமார், தணிகைமாறன்  ஆகியோரது... Read more »

மலேசிய வனப்பகுதியில் மறைந்திருந்த இந்தோனேசிய குடியேறிகள் கைது –

மலேசியாவின் Johor மாநிலத்தில் இருக்கும் Tenggaroh பகுதியில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 12 ஆவணங்களற்ற குடியேறிகள் மலேசிய படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் 19 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களை... Read more »

திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் பப்பாசி,மரவள்ளி உற்பத்திகளை விரிவாக்க உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை…..!

அரசாங்கத்தின் சேதனைப் பசளைகளைப் பயன்படுத்தி உள்ளுர் உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் நோக்கத்திற்கு அமைவாக திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் விவசாய விரிவாக்கல் பிரிவில் பப்பாசி மற்றும் மரவள்ளி உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் தங்கவேலாயுதபுரம் விவசாய நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பழப்பயிர் மற்றும் மரவள்ளிச்... Read more »