யாழ் விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…..!

யாழ் வட்டுக்கோட்டை அராலி செட்டியர் மடம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை (12-02-2022) யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.  குறித்த விபத்து சம்பவமத்தில் உடையார் கட்டு விசுவமடு பகுதியை சொந்த இடமாகக் கொண்டு, வட்டு மேற்கு – வட்டுக்கோட்டை பகுதியில் வசித்துவந்த கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தின் போது அவருடன் பயணித்த வட்டு மேற்கு வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ வசந்த் (வயது 20) என்ற இளைஞர் ப டு கா ய ம டை ந் த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்விபத்து கட்டுப்படுத்த முடியாத அ தி வே க ம் காரணமாகவே இந்த வி ப த் து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன் குறித்த விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, வீதி அபிவிருத்தி நிறைவடைந்த நிலையில் வீதியின் ஓரத்தில் போடப்படவேண்டிய எல்லைக்கோடு இன்னமும் போடப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குறித்த இடத்தில் வேகக் கட்டுப்பாட்டு தடை போடப்படவேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews