மட்டு.செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேக விழா –

மட்டக்களப்பு செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்தன, அஷ்ட பந்தன, நவகுண்ட பட்ஷ, மஹா கும்பாபிஷேக திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்திவிழா நேற்று நிறைவுற்றது. குறித்த ஆலய வரலாற்றில் முதற் தடவையாக சுவாமி யானையில் ஏறி பவணி வந்ததுடன் கும்பாபிஷேகப் பெருவிழாவில் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த... Read more »

வடக்கு மீனவர்களின் பிரச்சினை தீர்வுக்கு புத்திஜீவிகள், சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு தேவை….! அன்னராசா.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள், சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் சம்மேளனத் தலைவர் அன்ன ராசா தெரிவித்தார் வடக்கில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட நான்கு... Read more »

விழிநீர் பெருக்கெடுக்க இறுதி விடைபெற்றார் ஓஷதி!

இலங்கை பூப்பந்து வீராங்கனை ஓஷதி குறுப்பின், இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் நடைபெற்றன. இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி பல சர்வதேச பூப்பந்துப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குக! – சுமந்திரன் வலியுறுத்து –

“இலங்கையில் 300 – 400 பேர் தற்போதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. ஒருசிலரது வழக்குகளே எப்போதும் பிரபல்யமாகப் பேசப்பட்டுள்ளன. எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்க அல்லது முழுமையாக மாற்ற நடவடிக்கை எடுக்க... Read more »

புதையல் தோண்டுவதாக கூறி 7 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பூசகர் 21 வயது பெண்ணுடன் கைது! |

புதையல் தோண்டுவதாக கூறி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் மாத்தளை – நாவுல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 46 வயது பூசகருடன் தம்புள்ளை பிரதேசத்தச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சந்தேக... Read more »

ஜனாதிபதி வருகிறாராம்..! தமிழ் மொழி கல்வெட்டு பின்புறம் சென்றது, சிங்கள மொழி கல்வெட்டு முன்புறம் வந்தது, வவுனியா பல்கலைகழகத்தில்.. |

வவுனியா பல்கலைகழகத்திற்கு இன்று விஜயம் செய்யும் ஜனாதிபத கோட்டபாய ராஜபக்ஸ பல்கலைகழகத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ள நிலையில் பல்கலைகழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட நினைவுக் கல்லில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டு திடீரென இடமாற்றப்பட்டுள்ளது.  பல்கலைக்கழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட்சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும்... Read more »

யாழ்.மாவட்டத்தில் 13ம் திகதிவரை மழையுடன் கூடிய காலநிலை..! தாழமுக்கத்திற்கு வாய்ப்பில்லை.. |

யாழ்.மாவட்டத்தில் தற்போதுள்ள மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 13ம் திகதி வரை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் சூரியராஜா கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.குடாநாட்டில் நேற்று மதியம் ஆரம்பித்த மழையானது தொடர்ச்சியாக பரவலாக நள்ளிரவு தாண்டியும் நீடித்தது. வளிமண்டலத்தில்... Read more »

யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் பாதை சேவை ஸ்தம்பிதம்..! அந்தரிக்கும் மக்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உறக்கம்.. |

யாழ்.ஊர்காவற்றுறை – காரைநகர் இடையிலான பயணிகள் பாதை சேவை கடந்த 3 தினங்களாக செயலற்றுள்ள நிலையில் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.  குறிப்பாக, ஊர்காவற்றுறை பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை நீதிமன்று, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை போன்றவற்றில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சிரமங்களை... Read more »

யாழ்.உரும்பிராய் பகுதியில் கோர விபத்து..! 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல், இராணுவ சிப்பாய் உட்பட 3 பேர் படுகாயம்.. |

யாழ்.உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று  மருதனார் மடத்திலிருந்து கோப்பாய் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கடற்படையின் வாகனம் பலாலி வீதியால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் இடம்பெற்றபோது... Read more »

யாழ்.மாநகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணி உட்பட 10 பேரை பதம் பார்த்த நாய்! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள யாழ்.மாநகரசபை.. |

யாழ்.நகர் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உட்பட 10 பேரை கட்டாக்காலி நாய் ஒன்று கடித்துள்ளது.  யாழ்.நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் நேற்று மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது.  அதில்... Read more »