வத்திராயனில் மரணமடைந்த மீனவர் குடும்பங்களுக்கு முல்லைத்தீவு மீனவர்கள் உதவி……!

கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு குடும்பத்திற்கும் முல்லைத்தீவு கள்ளப்பாடு மீனவர்கள் இன்று உதவி வழங்கியுள்ளனர்.
கடந்த மாதம் இறுதி பகுதியில் கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போன நிலையில் கடந்த 31/01/2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட பிறேம்குமார், தணிகைமாறன்  ஆகியோரது குடும்பத்திற்கு  தலா 50000/- வீதம் ரூபா 100000/- பணத்தினை முல்லைத்தீவு    மாவட்டம் கள்ளப்பாடு மீனவர் சமூகத்தினர் தமது மீனவ சொந்தங்களிடம் சேகரித்து இன்றையதினம் கையளித்துள்ளனர்.
தமது உறவுகளை இழந்த குடும்பங்களிற்க்கு உதவி புரிந்தமைக்காக பலருக்கும் தமது நன்றிகளை வத்திராயன் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.
இவ்வாறான உதவிகளை வழங்குமாறும் கள்ளப்பாடு மீனவர்கள் அனைத்து மீனவர் சமூகத்தினரிடமும் கோரிக்கை விதைக்கின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews