பல பகுதிகளில் இன்று பகலில் கடும் வெப்பம்…

நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும்... Read more »

தமிழக மீனவப் படகோட்டிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை இரத்து.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து  கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவ படகோட்டிகள் மூவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த சமயம் கைது செய்யப்பட்ட தமிழக... Read more »

புத்தகம் வாசிக்காமல் பொழுதை ஒருநாளும் போக்காட்ட கூடாது, தூங்க கூடாது..! சட்டத்தரணி சோ.தேவராசா

புத்தகம் வாசிக்காமல் ஒருநாளும் பொழுதை போக்காட்ட கூடாது,  தூங்கக் கூடாது, புத்தகம் என்பது எங்களுக்கு பக்குவத்தை தருவது என சட்டத்தரணியும், பதில் நீதவானுமான சோ.தேவராசா தெரிவித்துள்ளார். சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஆண்மீக வெளியீடான ஞானச்சுடர் 316 வெளியீட்டு நிகழ்வில் மதிப்பீட்டு ... Read more »

வடக்கு ஆளுநர் செயலகத்தில் கைகலப்பு – ஒருவர் வைத்தியசாலையில்

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, வடமாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் ஒருவருடன், துப்பரவுப் பணியில் ஈடுபடும் நபர்  ஒருவர்... Read more »

வட்டுக்கோட்டை பவித்திரன் வெட்டிப் படுகொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு... Read more »

முகமாலை பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களால் பரபரப்பு…!

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது  மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  முகமாலை பகுதியில் நேற்றைய தினம்(25) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. இதனையடுத்து... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் குளிர்காயும் அரசியல்வாதிகள்…! ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு…!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் ஒரு சில சுயநல அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக அந்த உறவுகளின் உணர்வுகளை வியாபாரமாக்கி வருவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து... Read more »

முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று  மாலை, தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர்... Read more »

முறிகண்டி பகுதியில் விபத்து – இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலி.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.   குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.  ... Read more »

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக கஞ்சாவுடன் ஒருவர் கைது..!!

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இன்று (25.04.2024) காலை பொலிஸார் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 1000மில்லிக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் இவை விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது... Read more »