கட்டைக்காட்டு கடற்பரப்பில் 18பேர் கடற்படையால் கைது

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இன்றைய தினம் 15.05.20 24 வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட பாரிய சுற்றிவளைப்பில் 18பேர் கைது செய்யப்பட்டனர். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி முறைகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களால் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வெற்றிலைக்கேணி கடற்படையினர் கடற்பரப்பில் மேற்கொண்ட... Read more »

சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த நால்வர் கைது

வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரத்தில் அட்டைகளை பிடித்த நான்கு நபர்கள் இரண்டு படகுகளுடன் இன்று 15.05.2024 கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத தொழில் முறைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்துவருகின்றனர் இந்த நடவடிக்கையின்... Read more »

வடக்கு கிழக்கில் தனி ஈழம் – முயற்சி வெற்றிபெறும்…! சரத் வீரசேகர

தமிழர்களுக்கு எதிராகவே வடக்கு கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வானது பல்வேறு அடக்குமுறைகளுக்கும் மத்தியில் தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண நகர பழக்கடைக்கு முன்னால்... Read more »

யாழ்.போதனாவில் சிசுவை கைவிட்டு சென்ற சிறுமி சிக்கினார்..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தையை கைவிட்டு சென்ற 15 வயதுடைய சிறுமி நேற்று (14) பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். அத்துடன் சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய 25 வயதான இளைஞளும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.... Read more »

தமிழ் பொது வேட்பாளர்-ஏன் இவ்வளவு வன்மம்? (நிலாந்தன்)

ராஜதந்திரி ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்டார் “உங்களுடைய கட்டுரைகளை உள்நாட்டில் வாசிப்பவர்களை விடவும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதிகமாக வாசிக்கிறார்களா” என்று. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான வாதப்பிரதிவாதங்களைப் பார்க்கும் பொழுது உள்ளூரில் கட்டுரைகளை வாசிப்பவர்கள் குறைவு என்றுதான் கருத வேண்டியுள்ளது.வேட்பாளரை ஆதரிப்பவர்களும்... Read more »

கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை! பலத்த காற்றுடன் மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு  மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ,... Read more »

நினைவுகூரல் உரிமையை மறுதலித்து மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்களை கைது செய்த சம்பவத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வன்மையான கண்டனம்

திருகோணமலை மூதூரிலுள்ள சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கின்றது நினைவு கூரல் என்பது ஒவ்வொரு மனிதனும் அடிப்படை உரிமையாகும். உலகளாவிய அனைத்து சர்வதேச சட்டங்களும் அதனை ஆழமாக வலியுறுத்துகின்றன. இந்நிலையில் திருகோணமலை சேனையூரில்... Read more »

குமுதினி படுகொலையின் 39. வது ஆண்டு நினைவு…!

குமுதினி படுகொலையின் போது உயிரிழந்த 36 அப்பாவி மக்களின் 39ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் Read more »

நினைவேந்தலை அடக்கினால் மீண்டும் இருண்ட யுகம் உருவாகும் – சபா குகதாஸ் எச்சரிக்கை!

தமிழர்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் ஏவி விட்ட வன்முறையும் அதனால் ஏற்பட்ட பாரிய இனவழிப்பு முழு நாட்டையும் அதள பாதாளத்தில் தள்ளி வாக்களித்த சொந்த மக்களால் வரலாற்றில் ஒரு ஜனாதிபதி ஓட ஓட துரத்தப்பட்டதை பேரினவாத ஆட்சியாளர்கள் சிறிது காலத்தில் மறந்து விட்டார்கள் என்பது... Read more »