மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்!

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவமானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 5 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகப் பெருமான் உள்வீதியில் வலம் வந்து, சித்திரத்தேரில் வீற்றிருந்து வெளிவீதியுலா வலம்வந்து பக்தர்களுக்கு... Read more »

இளைஞர்களால் வீதியில் சிரமதானப் பணி முன்னெடுப்பு!:

வில்லூண்டி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது எதிர்வரும் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டு நாவாந்துறை – கன்னாபுரம் இளைஞர்களால் வீதியில் சிரமதானப் பணி இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. Read more »

யாழில் உறவினரின் வீட்டில் திருமண விருந்து உண்டுவிட்டு திரும்பிய கணவன் வாந்தி எடுத்து மரணம்!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் உறவினர்களின் வீட்டுக்கு சென்று திருமண விருந்து உண்டு விட்டு திரும்பிய கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்போது சுழிபுரம் – பெரியபுலோ மேற்கு பகுதியைச் சேர்ந்த பரஞ்சோதி ததீஸ்கரன் (வயது 29) என்ற இளம்... Read more »

நல்லை ஆதீன சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்..!

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 நேற்று இறையடி சேர்ந்தார். கொழும்பு வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக  சென்று கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கம்பன் கழகத்தில் தங்கி இருந்தவேளை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுவாமிகளின் திருவுடல் இன்று   வெள்ளிக்கிழமை... Read more »

பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில்.!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் 01.05.2025 (வியாழக்கிழமை) பிற்பகல் 03.00 மணிக்கு நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா. பார்த்தீபன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த உலகத் தொழிலாளர்தினப் பொதுக்கூட்டத்தில்... Read more »

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலமையில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மே தினம் யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக..!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலமையில் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மே தினம் யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக தமிழ்த் தேசியத்தையும், சமூக மாற்றத்தையும் ஒருங்கே வலியுறுத்தி முன் நகர்த்தும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ளது. நாளை காலை... Read more »

310 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது, இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டது..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு கடற்பகுதியில் 310 kg கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு படகுகளும் கடற்படை ரோந்து அணியினரால்  மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா, இரண்டு படகுகள்,  மற்றும் கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பொலீஸாரிடம் உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இது... Read more »

ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று  டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழப்பு ..!

கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட  அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று  டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலுள்ள் வீடொன்றில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன முன் சில்லுக்குள் சிக்கி... Read more »

வல்லிபுர ஆழ்வார் அாலயத்தில் விசுவாவசு வருட சிறப்பு பூசைகள்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் விசுவாவசு  சித்திரை புத்தாண்டு சிறப்பு பூசைகள் இன்று அதிகாலை முதல் ஆலய பிரதம குரு சுதர்சன கணபதீஸ்வரக் குருக்கள்  தலமையில் இடம் பெற்றன. 14.04.2025  காலை 4:00 மணியளவில் சுப்பிரபாதமும், 5:00 மணியளவில் உசற்காலப் பூசையும், 5:15... Read more »