யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாதியர் மற்றும் காவலாளிகளின் அடாவடி நடவடிக்கை – சேவை பெற விரும்பாத மக்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாதியர் மற்றும் காவலாளிகளின் அடாவடி நடவடிக்கைகளால் தான் யாழ்ப்பாண மக்கள் வைத்தியசாலையூடாக சேவைகளைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையுள்ளது என வேலணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்  சுவாமிநாதன் பிரகலாதன் தெரிவித்தார். காய்ச்சல் காரணமாக வைசாளினி என்ற சிறுமி யாழ்ப்பாணம்... Read more »

உலகப்புகழ்பெற்ற விரைவுச் சேவை வர்த்தக உணவகங்களில் பணி புரிவதற்கான பயிற்சிகள் ஆரம்பம்…!

உலகப்புகழ்பெற்ற விரைவுச் சேவை வர்த்தக உணவகங்களில் பணிக்கு அமர்த்தக்கூடிய வகையில் மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக கற்கைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காரைநகரில் இயங்கிவரும் தொழில்பயிற்சி நிலையத்தில் இதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன், பயிற்சியை மேற்கொள்ளத் தேவையான முழுமையான சமயலறை வசதிகள் பீட்சா ஹட் நிறுவனத்தின் அனுசரணையில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.... Read more »

ஆளுநர் தலைமையில் ஆரம்பமானது வடமாகாண விளையாட்டு விழா…!

வடமாகாணத்தின் 14வது விளையாட்டு விழா வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 06.09.2023 அன்று காலை ஆரம்பமானது. வடமாகாணத்தில் உள்ள 651 பாடசாலைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கோட்டமட்ட மற்றும் வலயமட்ட வெற்றிகளின் பின்னர் மாகாண விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.... Read more »

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு ஐ.நா அமைப்பு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் – ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர்

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அன்றாட செயற்பாடுகள்... Read more »

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்!- சிறுமியின் பெற்றோர் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் எட்டு வயதான சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு... Read more »

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டு வண்டி சவாரி!

யாழ்ப்பாணம் – மட்டுவில் ஐக்கிய மக்கள் கழகத்தின் எற்பாட்டில், இளைஞர்களை ஒன்றிணைக்கும் மாட்டுவண்டிச்சவாரி நேற்று முன்தினம் (03.09.2023), குறித்த கழகத்தின் இணைப்பாளர் ப.கஜிதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த யாழ்ப்பாண மாவட்ட மாட்டுவண்டி சவாரிக்காக, 34 கழக மாட்டு வண்டி கழக உறுப்பினர்கள், 155 காளைமாடுகளுடன்... Read more »

வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாகவே எனது பேர்த்தியின் கை அகற்றப்பட்டது – பேரன் கதறல்…!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாக எனது பேர்த்தியின் கையானது துண்டிக்கப்பட்டு விட்டது என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் தந்தையார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்றையதினம் (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

நாடு முழுவதும் சைவ ஆலயங்கள் மக்கள் ஆதரவுடன்தான் கட்டப்பட்டுள்ளன – கு. சுரேந்திரன்- பேச்சாளர் ரெலோ.

 25 மாவட்டங்களிலும் இந்து ஆலயங்கள் கட்டப்பட்டுள்ள பொழுது பெளத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் கட்டுவதற்கு எதற்கு தடை என்று கேள்வி எழுப்பி உள்ளனர் இனவாத மதவாத மும்மூர்த்திகள்.  அனைத்து மாவட்டங்களிலும் சைவ ஆலயங்கள் அங்குள்ள பக்தர்களால் மக்கள் ஆதரவுடன் உரிய அனுமதி பெற்று சட்டபூர்வமாக... Read more »

மீற்றர் வட்டி கொடுமையால் இளம் குடும்பப் பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

மீற்றர் வட்டிக்கு பணம் பெற்று கடனில் சிக்கிய இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவமானது நேற்றைய தினம் (04) யாழ்ப்பாணம் – ஓட்டுமடத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு பணத்தினை பெற்றுள்ளார்.... Read more »

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்…!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதம் (பெளதிகவியல்) மற்றும் உயிரியல் பிரிவுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவர்கள் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளனர். பௌதிக பிரிவில்  6 மாணவர்களும், உயிரியல் பிரிவில் 5 மாணவர்களும் யாழ்ப்பாணம் மாவட்ட மட்ட தர நிலையில் இடம்பிடித்துள்ளனர். மாணவர்களின்... Read more »