ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்கைது…!

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான  ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் 15.09.2023 ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.... Read more »

கிழக்குத் திமோர் வழிமுறையே பொருத்தமானது – தமிழர் தாயக சங்கம்!

இலங்கையின் வடக்கு கிழக்கில் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு கிழக்கு திமோரில் ஐ.நா பயன்படுத்திய  வழிமுறையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை பின்பற்ற வேண்டும். என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக  இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் 16.0.2023... Read more »

நல்லூர் உற்சவ காலத்தில் கடமையாற்றிய பொலிசார்,சாரணங்களுக்கு மதிப்பளிப்பு….!

நல்லூர் உற்சவ காலத்தில் கடமை ஆற்றிய பொலிசார் மற்றும் சாரணங்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு ,நேற்று நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாங்க மகோற்சவம்  கடந்த 21 ம் திகதியிலிருந்து ஆரம்பமாகி நேற்றுடன் நிறைவு பெற்ற  நிலையில் ... Read more »

தியாகதீபம் திலீபனின் இரண்டாம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நேற்று (16.09.2023) சனிக்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப்... Read more »

படகுகிற்க்கு தீ  வைப்பு, விரைந்து செயற்பட்ட   பருத்துத்துறை போலீசாரின் முயற்சியால்  தீயணைப்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித் துறை முனைப்பகுதியில்  இரவு 10:00 மணியளவில்  பாவனையற்றிருந்த பல நாள்  படகுகிற்க்கு  multi day board. இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பாரிய தீ பரவல்  ஏற்பட்டுள்ளது. இவ்வேளை வீதியால் நடமாடும் சேவையில் ஈடுபட்ட பருத்தித்துறை பொலீசார் குறித்த... Read more »

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த... Read more »

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பம்…!

வரலாற்று சிறப்புமிக்க  யாழ்ப்பாணம் வடமராட்சி  வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்  இன்றைய தினம் 14.09.2023 காலை 8. 45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 16 நாட்கள் இடம் பெறவுள்ள  உற்சவத்தில் விசேட திருவிழக்களாக  எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெண்ணைத் திருவிழாவும், ... Read more »

நெடுந்தீவு பிரதேசத்தில் பயிலுநர்களுக்கான தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் (NvQ) நிகழ்வு….!

நெடுந்தீவு பிரதேசத்தில் பயிலுநர்களுக்கான தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் (NvQ) நிகழ்வு இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் யாழ் மாவட்ட தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் தொழிவழிகாட்டல் உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின்... Read more »

யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோதி விபத்து சம்பவித்தது. விபத்தில் கோப்பாயைச் சேர்ந்த... Read more »

பேருந்திற்க்காக காத்திருந்த ஆசிரியையின் தங்கச்சங்கிலி அறுப்பு…..!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று மாலை 04.30 மணியளவில் ஆசிரியை ஒருவரின் தங்கிச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியை பேருந்திற்காக காத்திருந்தவேளை உந்துருளியில் வந்த  இருவரால் ஆசிரியையின் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது இந்நிலையில் இது தொடர்பாக மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில் உடனடியாக... Read more »