நெடுந்தீவு பிரதேசத்தில் பயிலுநர்களுக்கான தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் (NvQ) நிகழ்வு….!

நெடுந்தீவு பிரதேசத்தில் பயிலுநர்களுக்கான தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் (NvQ) நிகழ்வு இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் யாழ் மாவட்ட தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபையின் தொழிவழிகாட்டல் உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திரு.இ.திருமுருகன் மற்றும் பிரதேச செயலகம் சார்பில் கணக்குகிளை உத்தியோகத்தர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் விருந்தினராக கலந்து சிறப்புத்தனர்.
நிகழ்வில் 43 பேருக்கு கட்டட நிர்மாண கைவினைஞர்,குழாய் பொருத்துநர்,மரவேலை கைவினைஞர் துறைகளில் தேர்ச்சி பெற்ற பயிநர்களுக்கு NVQ சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews