யாழ்ப்பாணம் பேருந்து நிவலயத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பிறந்தநாளை கொண்டாடியவர்கள் விளக்கமறியலில்!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிறந்தநாள் கொண்டாடிய கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட... Read more »

தமிழ் அரசியற் கட்சிகளை வழிப்படுத்த மக்கள் இயக்கமொன்று பலம் பெற வேண்டும்…! பொ.ஐங்கரநேசன்  சுட்டிக்காட்டு.

விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் அவர்களின் அரசியல் துறையே தமிழ்த் தேசியக் கட்சிகளின் வழிகாட்டும் பீடமாக இருந்தது. அவர்கள் எதை முன்மொழிந்தார்களோ அதையே எமது கட்சித் தலைவர்கள் வழிமொழிந்தார்கள். தமிழ் மக்களுக்கான ஒரு தேசியத் தலைமை இல்லாத நிலையில் தமிழ் அரசியற் கட்சிகள் ஒவ்வொன்றும் திக்கொன்றாக ... Read more »

வடக்கில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை – விவசாய அமைச்சர்

வடமாகாணத்தில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் நெற்செய்கைக்கு மட்டுமன்றி மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட பயிர்களுக்கும் விவசாய திணைக்களம் அதிகூடிய ஆதரவை வழங்கும் எனவும் விவசாய... Read more »

ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல்….!(video)

20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஒன்று (15.10.2023 ) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போது ஹர்தால் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள், கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களை சந்திப்பது, இந்தியப் பிரதமருக்கான கடிதம்... Read more »

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மாளிகையை ஏலம் விடுவதற்கு முயற்சி – உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் திரைமறைவில் சூழ்ச்சி…!

யாழ்ப்பாணம் வலி வடக்கில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அதனுடன் சூழ உள்ள தனியார் காணிகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்க திரைமறைவில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, வலி. வடக்கு தெல்லிப்ழைப் பிரதேச... Read more »

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாக்குதல் சம்பவம் – பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்த நபர் மீது தாக்குதல் முயற்சியை மேற்கொண்ட இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இன்றிலிருந்து கடமை நீக்கம் செய்யப்படுவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்... Read more »

தமிழ் ஈழத்திற்கான மக்கள் ஆணை கிடைத்து 46 ஆண்டுகள் தெரியாதா? வீரசேகரவுக்கு – சபா குகதாஸ்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவர்கள் அமெரிக்கா விசா கிடைக்காத நிலையில் நீதிபதி சரவணராஜா விவகாரத்திலும் ஆட்டம் கண்டு புலம்பியவர் தற்போது புதுக் கயிறு விடுவது போல தமிழர்கள் ஆயுதபலத்தால் கிடைக்காத தமிழீழத்தை பதின்மூன்றாம் திருத்தம் மூலம் பெற முட்படுகிறார்கள் என முட்டாள் தனமாக... Read more »

பண்டத்தரிப்பு ஜசிந்தா பாடசாலைக்கு முயற்சியாண்மையுடன்  கூடிய பாடசாலைத் தோட்டத்தை சிறந்த முறையில்  அமைத்தமைக்கான பாராட்டு

பண்டத்தரிப்பு ஜசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சிறந்த முறையில் பாடசாலைத் தோட்டம் அமைத்ததுடன் மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் விவசாய நுட்பம் தொடர்பாக அறிவூட்டல் செய்யப்பட்டது. அத்துடன் மாணவரின் போசாக்கு நிலையை ஆராய்ந்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியும் இவ்வருடம் சிறப்பான... Read more »

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றையதினம் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட... Read more »

யாழ்ப்பாணத்தில் பொழிந்த மழை – விவசாயிகள் மகிழ்ச்சியில்!

பெரும்போக நெல் விதைப்பு காலமானது ஆரம்த்த நிலையில் மழை பெய்யாமையினால் விவசாயிகள் மிகுந்த கவலையில் காணப்பட்டனர். இதனால் விதைப்புகள் பின்தள்ளப்படுமா, விளைச்சல் கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் காணப்பட்டனர். இந்நிலையில் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் விதைப்பிற்கு ஏற்ற வகையில் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. அந்தவகையில் தமது... Read more »