இந்திய மீனவர்களை தடுக்காவிடின் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதையும் தடுக்க முடியாது” மீனவர்கள் எச்சரிக்கை

எல்லை மீறும் இந்திய இழுவைப் படகுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காவிடின் கடலில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுக்க முடியாமல்போகும் என தமிழ் மீனவர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய இழுவைப் படகுகள் எல்லைமீறி இலங்கையின் வடக்கு கடலில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து, வடக்கு தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு... Read more »

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு!

  யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரி ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான, கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு... Read more »

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டிய முக்கிய நிகழ்வு!

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்தமையின் 200 ஆண்டுகளின் நிறைவினை ஒட்டி, இலக்கியம், திரைப்படம், நடன ஆற்றுகை என்பவற்றினை உள்ளடக்கிய‌ ஒரு நாள் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25.02.2024) அன்று யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது. மலையகத் தமிழ் மக்களின் வாழ்வியல், அனுபவங்கள், இலட்சியங்கள், போராட்டங்கள்... Read more »

மிக இளவயதில் பாக்குநீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த பயணிக்கவுள்ள ஹரிகரன் தன்வந்துக்கு வாழ்த்து தெரிவித்த அங்கஜன் எம்.பி

13 வயதில் துணிச்சலுடன் சாதிக்கப் புறப்பட்டிருக்கும் தன்வந்த்தை எனது அலுவலகத்தில் சந்தித்த போது எனது வாழ்த்துச் செய்தியையும் வழங்கி வாழ்த்தியனுப்பினேன். இலங்கை – இந்திய தேசங்களுக்கிடையிலான பிணைப்பை பலப்படுத்தும் பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் சாதனையை நிலைநாட்டும் பயணத்தை ஆரம்பித்துள்ள திருகோணமலையைச் சேர்ந்த செல்வன் ஹரிகரன்... Read more »

மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடாத்தும் சங்கானை பிரதேச செயலகம்!

சங்கானை பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடாத்துவதால் சேவைகளை பெறுவதற்கு செல்லும் மக்கள் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பிரதேச செயலகங்ககளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்காலத்தில் நடைபெறவுள்ளன. அந்தவகையில் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப்... Read more »

முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தல்!

முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தல்! மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும் மற்றுமொரு சிநேகபூர்வ கலந்துரையாடல், உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில்  நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் இன்று (20.02.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாண கெளரவ... Read more »

யாழின் முக்கிய பகுதியில் மாணவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

யாழ்.பருத்தித்துறை பகுதியில் வீதியில் நேற்று  (20) மாலை மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்... Read more »

யா/கெருடா இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்

வடமராட்சி யா/கெருடா இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று மதியம் 02.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சுதாகரன் தலைமையில் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஆண்டறிக்கையும்,ஆண்டு வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டதோடு அதனை தொடர்ந்து அபிவிருத்திசங்கத்தின் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது. ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய... Read more »

உத்தேச கடற்றொழில் சட்டம் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதிக்காது – பூசிமெழுகும் டக்ளஸ்

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) உதவியுடன் நன்னீர் மீன் வளர்ப்பு அபிவிருத்தி செய்யப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.   உத்தேச கடற்றொழில் சட்டத்தின் ஊடாக மீனவ மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும்... Read more »

மூன்று மாதங்களின் பின் நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர்-வரவேற்கும் மக்கள்

கடந்த மூன்று மாதங்களாக வைத்தியர் அற்று செயற்பாடற்றுக் காணப்பட்ட வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை வைத்தியசாலைக்கு புதிய வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு,நித்தியவெட்டை,போக்கறுப்பு ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் குறித்த வைத்தியசாலையை நம்பியே இதுவரை வாழ்ந்து வந்தனர். பணியாற்றிய வைத்தியர் திடீர் இடமாற்றம் பெற்றுச் சென்றதால்... Read more »