யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு!

 

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரி ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான, கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews